Pages

Subscribe Twitter Twitter

Monday, July 28, 2014









சிதறிய‌ கண்ணாடித் துண்டுகளின் முகவரிகள்...



from www.bbc.com

உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்றின் மீது பட்டுத்தெறிக்கும் சூரியஒளிக்கதிர்க்கீற்று ஒன்றுக்கு இருக்கும் சுதந்திரத்தை பாதுகாப்பதாக எண்ணியபடி, சற்று நேரம்முன்பு வெடித்துச் சிதறிய எறிகணையினால் சிதைந்த வாழ்விடமொன்றில் இருந்து வெளிப்பட்ட ஒரு கண்ணாடி துண்டுக்கு அபயமளித்த பாலஸ்தீனநிலம் இன்முகத்துடன் கந்தகத்தூசினை நுகருகின்றது. ஏறிகணையின் முகவரி "அவர்கள்". யாவும் கற்பனை என்று நிராகரிப்பதனையும், சத்தியம் என்று அளூத்தி உச்சரிப்பதையும் நான் விரும்பவில்லை ஆனால் நல்மனிதர்களின் மெளனம் உலகத்தில் பேரழிவுகளின் திறவுகோல். ஒடிவரும் நீரோடையின் சலசலப்பில் ஒரு மூளை நித்திரையில் இருக்கும் அவனுக்கு தெரியாமல் ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டு மும்மணினேரம் முன்பு அவ் ஓசைமீது அவன் எரிந்துவிழுந்த போது பதியப்பட்ட "ஞாபகஇழையின்" தழும்புக்கு மருந்து தடவிக்கொண்டிருக்கிறது. ஓவ்வொரு நாள் காலையின் துயில்ழெழும் வேளையிலும் அவன் அந்த ஓசையினை வெறுப்பதே இல்லை.  
உதவி என்ற செயல் ஒன்றே உலக‌ இயக்கத்திற்க்கு காரணகர்த்தாவாகின்றது என்பது எனது நிலைப்பாடு. இடைவெளியின் பின் திண்ணையில் தோற்றம்...  சிறுவயதில் "காக்கும் கரங்கள்" என்று வாசித்த ஞாபகம். எங்கும் நீக்கமற‌ நிறைந்திருந்ந்தாலும் இடதுகை அறியாமல் வலதுகை செய்வதே பெரியஉதவியாக இருக்கும் என்று நினைப்பதற்குள் எங்கிருந்தொவந்த ஒட்சிசன் நிறைந்தவாயூ என்பெருமூச்சின் சுவாசமாய் என்னுள் பரவுகின்றது. "ஏணியாயும் தோணியாயும்" உதவிசெய்யும் பலர், மெழுகுவர்தியாக உருக்கும் சிலர், ஆலைமரமாக தாங்குபவர்கள், விளைநிலங்கள் எனஎண்ணற்ற வகையில் பூமி புண்ணியம் செய்கிறது இவர்களின் பெயரால். கண்களை மூடும் இமையால் கண்ணீரை மூடமுடிவதில்லை அதுபோல் ஒவ்வொருவரும் தம் "காக்கும் கரங்களை" நினைக்கும் தருணங்களில் காரணங்களின்றி இதயம் இரைகின்றது. 
அன்னையின்கை, அன்னமிட்டகை, அரவணைத்தகை, தொட்டணைத்தகை, அந்தோ தூரத்தே மனக்கண்ணிற்குத் தெரியும் கைகள் என சிந்தை தெளிவிக்கும் நினைவுகள் ஏராளம். உதவிதான் இறைவன் என்றால் நாஙகள் அவர்ப‌டைப்பு என்று மார்புதட்டி பெருமைகொள்ள நாம் தகுதியானவர்கள் அல்லாவிடின் கடவுள் படைப்பதற்கும், நாம் படைப்பதற்க்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. கூர்ப்புக்கொள்கையின் தக்கனதான் பிழைக்கும் என்று வாதிடும்போதும் உதவிடுதல் என்றசெயல் தவிர்க்கமுடியாதது. மனிதர் செத்துச் செத்து விழுந்தாலும் அவர்காலத்தால் ஈன்றஉதவி உயிர் பெற்று உலாவருகின்றாது, அசைவாடுகின்றது, மனங்களிற்குள் ஊடுருவுகின்றது, மனம் மாற்றுகின்றது. வெள்ளிநிலவின் தண்மைக்கு, என் அதன் "ஆண்மைக்கு" கூட‌, அதன் விகாரமான வதனம்தான் காரணமோ அதுபோல் எண்ணமுயர்ந்த இடத்தில் சிறுபுன்முறுவல்கூட உயிர்காக்கும் உதவியாகின்றாது. 

உலகத்தின் நிம்மதிக்கும் உதவி தேவை... உடைந்த கண்ணாடித்துண்டுகள் ஒன்றுசேர்க்கப்பட்டு ஒரேகுழியில் புதைக்கப்படுகின்றன, கண்ணாடித் தூண்டுகளின் முகவரிகள் காலதிதின் கண்ணாடியாக‌ எதோ ஒருவகையில் உதவி தேடி. ஏன்னைத் தூண்டிய கண்ணாடித் துண்டுகளின் முகவரிகள்... MH17, Gaza Crisis, South Sudan-Food Crisis, Syria Crisis, and many more.