Pages

Subscribe Twitter Twitter

Tuesday, September 13, 2011









புதிய கைத்தொலைபேசியோ, மடிக் கணனியோ வாங்க வேண்டுமா..??கவலையை விடுங்கள்..

புதியதொரு கையடக்கத் தொலைபேசியோ, மடிக் கணனியோ, புகைப்படக் கருவியோ வாங்கியபின்னர் உடனடியகவே அறிமுகமாகும் புதிய மொடெலாலோ அல்லது நாம் பெருந்தொகை பணத்தைக் கொடுத்து வாங்கியவுடன் அந்தப் பொருளின் சந்தை விலையில் சடுதியாக ஏற்படும் வீழ்ச்சியாலோ கடுமையாகப் பாதிக்கப்பட்டவரா நீங்கள்..??கவலையை விடுங்கள்.

அண்மையில் உங்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதை நோக்காகக் கொண்ட Decide.com என்ற தளமொன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.. குறித்த இலத்திரனியல் பொருளை நீங்கள் வாங்கலாமா இல்லை புதிய அறிமுகத்திற்காகக் காத்திருத்தல் உசிதமானதா..விலையிலேற்படக்கூடிய மாற்றங்களிற்கான எதிர்வு கூறல்கள் என உங்களிற்கு ஆலோசனை வழங்கக் கூடியவாறு இந்தத் தளத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் சராசரியாக ஆறு புதிய மடிக்கணனி வகைகள்,ஒரு புதிய வகை புகைப்படக் கருவி ,ஒரு புதிய வகை தொலைக்கட்ட்சியென புத்திது புதிதாக அறிமுமாகிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நுகர்வோரிற்கு இந்தத் தளம் பெருந்துணையாக இருக்கும்.ஆனால் இத் தளம் பிரபலமானால் இவர்களது விலை எதிர்வு கூறல்கள் பொருட்களின் விலையை, நிரம்பலை செயற்கையாக நிர்ணயிக்கக்கூடிய துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்திவிடும் என விமர்சிப்பவர்களும் உள்ளார்கள்
.
எது எவ்வாறானாலும்  புதிய மொடல்களின் அறிமுகம் பற்றிப் பெரிதாக உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியாதவர்கள், புதியதொரு இலத்திரனியல் உபகரணத்தினை வாங்கமுற்படுகையில் இந்தத் தளத்தினது எதிர்வுகூறலையும் ஒரு முறை கவனித்துத் தங்கள் தீர்மானங்களை மேற்கொள்வதன் மூலம் ஏற்படக் கூடிய ஏமாற்றத்தினைத் தவிர்த்துக்கொள்ளலாம்..

மேலதிக விரிவான விபரங்களிற்கு இங்கே சொடுக்குங்கள்
tech crunch பதிவிற்கு.. 


Saturday, August 20, 2011









இலங்கை அணி.. கவனஞ் செலுத்த வேண்டியவை..


 இன்று இடம்பெற்ற தொடரைத் தீர்மானிக்கும் முக்கிய கிறிக்கெற் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவி இந்திய அணிக்கு தாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்து இந்திய அணி விசிறிகளை சீண்டிய எங்களைப் போன்றவர்களிற்கு எல்லாம் மரண அடி வாங்கித் தந்துள்ளது. அடுத்த போட்டியிலாவது இலங்கை அணி வென்று மீண்டு எங்களைப் போன்றவர்களை பழையபடி சீண்டிப்பார்க்கும் போமிற்கு திரும்பச் செய்யுமோ என் நாமே குப்புறப் படுத்துச் சிந்தித்திருந்த வேளையில் கிறிக்கெற் பதிவெழுதாத நீயெல்லாம் ஒரு பதிவரா என நண்பனொருவன் வெந்த புண்ணில் வேல் பாச்சிவிட்டான்.


இலங்கை அணிக்கு ஆலோசனைகளை வழங்கி அணியை அடுத்த போட்டியிலாவது வெல்லச் செய்ய எதற்கும் சளைக்காமல் இலங்கை அணிக்காக வாதாடும் அமரேசைத் தொடர்பு கொள்வோமென்று பார்த்தால் அவர் தொடர்பு வலையமைப்புக்கு இப்பாலோ அப்பாலோ சென்றுவிட்டதால் ..இதோ நானே களத்தில் இறங்கி விட்டேன். இதோ எனது ஆலோசனைகள்.

இலங்கை அணி துடுப்பாட்டத்தில் ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் இப்போதெல்லாம் தடுமாறுவதால் இன்னும் இரண்டு துடுப்பாட்ட வீரர்களை அணியிலிருந்து தூக்கிவிட்டு பந்துவீச்சாளர்கள் இருவரை அணியில் இணைக்கலாம்.தொடரை ஏற்கனவே இழந்து விட்டதால் அடுத்த போட்டியில் உலகில் மிக நீண்ட வால் (அது தாங்க tail end) கொண்ட அணியென்ற கிண்ணஸ் சாதனையை இலக்கு வைத்து பத்துப் பந்து வீச்சாளர்களும் ஒரு விக்கெட் காப்பாளருமாக ஒரு அணியைத் தெரிவு செய்யலாம். முடிந்தால் இந்திய அணித் தலைவர் டோணி போலப் பகுதி நேரமாகப் பந்து வீசக்கூடிய விக்கெட் காப்பாளர் ஒருவரை இணைப்பது அணிக்கு மேலும் வலுச் சேர்த்து சாதனையை மேலும் வலுவாக்கும்.

எத்தனை முழுநேரப் பந்து வீச்சாளர்கள் அணியிலிருந்தாலும் பகுதி நேரப் பந்து வீச்சாளர்களைக் கொண்டு தான் ஆரம்ப பந்துப் பரிமாற்றங்களை வீசி முடிக்கவேண்டும். முடிந்தால் லசித் மலிங்கவிற்கு ஓவரே கொடுக்காமல் அதனையும் பகுதி நேரப் பந்து வீச்சாளர்களைக் கொண்டு வீசி முடிக்கச் செய்யலாம்.

எப்போதோ ஒரு உலகக் கிண்ணத் தொடரில் சில ஐம்பதுகளை அடித்ததோடு மட்டுமல்லாமல் அணி தோற்கும் போதெல்லாம் ஐம்பது அடித்து சாதனை படைக்கும் இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சாமர சில்வாவை தலைவராக நியமித்துப் அணியைத் தூக்கி நிறுத்துவதோடு மைந்தன் சிவா போன்ற விமர்சகர்களிற்குத் தகுந்த பதிலடி கொடுக்கலாம். அதுவும் அவரைத் துடுப்பாட்ட வீரராகவே கணிக்க முடியாது எனக் கருத்துக் கூறும் கன்கோன் போன்றவர்களை 4 துடுப்பாளர்+5 பந்து வீச்சாளர் + அணித்தலைவர் எனக் கருத்துக் கூறச் செய்யலாம். 

எல்லாவற்றிற்கும் மேலாக ”சுழற்றக் காத்திருக்கும் இலங்கை ” எனப் போட்டி தொடங்க முதலே ஆரூடம் கூறி எவ்வளவு அடி வாங்கினாலும் சளைக்காத எங்கள் விக்கிரமாதித்தன் லோசன் அண்ணாவின் வலைப்பூவை இலங்கை தொடர்பான போட்டித் தொடர்கள் ஆரம்பிக்க முதலே ஏதாவது தொழினுட்ப முறைகளைக் கையாண்டு உத்தியோகப்பற்றற்ற முறையிலே முடக்க வேண்டும். 

7 தடவை துடுப்பாட்டப் போட்டியைப் பார்க்கப் போய் சகல தடவையும் இலங்கை அணியைத் தோற்கடிக்கச் செய்த அஷ்வின் போன்றவர்களையெல்லாம் ஏதாவது தடைச்சட்டத்தில் தூக்கி உள்ளே போட்டு அடுத்த போட்டிக்கு மைதானப் பக்கமே வரவிடாமல் செய்து இலங்கையின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 

யாரது..?? எனது பாதுகாப்பை உறுதிப்படுத்தச் சொல்லி மகஜர் தாயாரிப்பது..!!
பி.கு: யாவும் கலப்படமற்ற கற்பனை










அமெரிக்கா.. கருத்து.. மாற்றுக் கருத்து..



உண்மையிலேயே நாமெல்லாம் எமக்கு அருகில், எம்மைச் சூழ எம்மையெல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கின்ற விடயங்களைப் பற்றியெல்லாம் அடிப்படையிலிருந்து அறிந்து வைத்திருக்கின்றோமா என்பதில் எனக்கு நீண்டகாலமாகவே ஒரு சந்தேகம்.

 முதலில் இந்த வீடியோவை ஒரு முறை பாருங்கள்.அவர்களது விடைகளையும் கருத்துக்களையும் அவதானமாகக் கவனியுங்கள்..


சிரிப்பை அடக்கமுடியாதவர்கள் நன்றாகவே சிரித்துவிட்டு விடயத்திற்கு வாருங்கள்.


எங்களில் பலரும் இப்படியானவர்களாக இருப்பது மறுக்க முடியாத உண்மையே.
Facebook ல் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க முற்பட்டுத் தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுபவர்கள் பலரை நீங்கள் கண்டிருப்பீர்கள்.  இந்த வீடியோவை பார்த்ததிலிருந்து எங்கள் நண்பர் குழுவிடையே வழமை போலவே ஆரம்பித்த விவாதமொன்று நீண்டு ..வழமை போலவே முடிவேதும் இல்லாமல் முடிவடைந்துவிட்டது.

அந்த விவாதத்தின் அடிப்படைச் சந்தேகங்கள் இது தான்..

  • எதற்கெடுத்தாலும் தங்கள் கருத்தைக் குறிப்பிடுபவர்கள் இருக்கிறார்களே. அவர்கள் எத்தனை சதவீதமானவர்கள் விடயத்தின் ஆழத்தை புரிந்து  கருத்துத் தெரிவிக்கிறார்கள்..? ?
  • உண்மையிலேயே எல்லா விடயத்திலும் ஒருவனிற்கு சொந்தக் கருத்து இருக்க வேண்டுமா..?? சில விடயங்களில்  தனக்கென சொந்தக்கருத்தெதுவும் இல்லாமல் இருப்பதில் தவறேதுமிருக்கிறதா..?? 
  • மாற்றுக் கருத்து..மாற்றுக் கருத்து என்கிறார்களே.. அப்படி மாற்றுக் கருத்துக் கூறுபவர்களில் ஏறக்குறைய சகலருமே ஏன் எல்லாக்கருத்துக்குமே மாற்றுக் கருத்துக் கூறுகிறார்கள்..?? 
  • எது கருத்து ..??எது மாற்றுக்கருத்து..?? அநேகமானவர்கள் தெரிவிப்பதற்கு மாறாகத் தெரிவிப்பது தானா மாற்றுக்கருத்து..?? ;-)


யாரது..??இப்பவே கண்ணைக் கட்டுதே என்பது..
 சரி சரி .. பிழைத்துப் போங்கள்.



Tuesday, August 2, 2011









புற்றுநோய்க்கெதிரானதொரு பாரிய போர்.. தொடர்கின்றது..

கடந்த மாதம் முதலாம் திகதி தேவேந்திர முனையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட "பாதை" எனப் பெயரிடப்பட்ட பிரமாண்ட நடைபயணம் இருபத்தேழாம் திகதி பருத்தித்துறை முனையை வந்தடைந்தது. 

குறைந்தது இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டுவதன் மூலம் யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை உருவாக்குவதே நடைபயணத்தின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது. ஆனாலும் ஏறக்குறைய 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களையே அவர்களால் இதுவரை திரட்ட முடிந்துள்ளது. எனவே, உரிய இலக்கினை அடைவதற்காக மேலும் நன்கொடைகள் எதிபார்க்கப்படுகிறன.                                                                         இறுதி நாளன்று இலங்கை கிரிக்கெட் அணி வீரர் மஹேல ஜெயவர்தன அவர்களால் தெல்லிப்பளையில் புதிய கட்டடத்திற்கான அத்திவாரம் இடப்பட்டது.  

  • இது தொடர்பான மேலதிக விபரங்களையும், நன்கொடை வழங்குவதற்கான அறிவுறுத்தல்களையும் பெறுவதற்கு இங்கே சொடுக்குங்கள்.
  • இது பற்றிய எனது முன்னைய பதிவிற்கு இங்கே சொடுக்குங்கள்.
  • உத்தியோகபூர்வ இணைய முகவரி .www.trailsl.com 






Friday, July 15, 2011









தெய்வத்திருமகள்- அருமையான பாசப் பிணைப்பு

யாழ் இந்துக் கல்லூரி இளைஞர் வட்டத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட   தெய்வத்திருமகள் சிறப்புக்காட்சி நேற்றிரவு பார்க்கக் கிடைத்தது .படம் முடிவடைகையில் நள்ளிரவு தாண்டியிருந்தபோதும் எந்தச் சலிப்புமில்லாமல் மனது முழுவதும் இனம்புரியாத ஓர் இதமான உணர்வு நிரம்பியிருந்தது. படக் காட்சி ஒழுங்கமைப்பில் நானும் பங்குபற்றியிருந்ததால் பல நண்பர்களோடு உரையாடி படத்தைப்பற்றிய கருத்துகளை அறிய முற்படுகையில் அனைவருமே திருப்ப்தியாயிருந்தமை இரட்டிப்பு சந்தோசமே..

இயக்குனர் விஜய் மீது கிரீடம் படத்திலிருந்தே ஒர் ஈர்ப்பு இருந்ததும், விக்ரமை தெய்வத்திருமகள் ரெயிலரரில் பார்த்ததிலிருந்தே எப்படியாவது இந்தப் படத்தை பார்த்துவிடவேண்டும் என்று தீர்மாந்த்திருந்தேன்.மன நலம் குன்றிய தந்தையின் வேடம்.. விக்ரம் யாவரும் எதிர்பார்த்தது போலவே நடித்துக் கலக்கியுள்ளார்.



Sunday, July 10, 2011









விஞ்ஞானி சபேசன் மனம் திறக்கிறார்..

அண்மைக்காலமாக எங்கள் Facebook பக்கமெங்கும் பரபரப்பாக  வியாபித்திருக்கும் பெயர் தான் சபேசன் சிதம்பரநாதன்.. எங்கள் காலத்தில் எங்கள் கல்லூரியில்  கற்றவர் என நாமெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்ள வழிவகுத்தவர்..

 மலிவு விலையில் ஒருவர் இருக்கும் இடத்தை  உடனடியாக அறிந்துகொள்ளக்கூடியதொரு பொறிமுறையை கண்டுபிடித்ததன்மூலம்  உலகின் கவனத்தைத் தன்பக்கம் திருப்பிய ..வயதில் இன்னும் இருபதுகளிலேயேயுள்ள இளைஞன்.. விமான நிறுவனங்கள் பலவும் தங்கள் செலவை மில்லியன் கணக்கில் குறைத்துக்கொள்ள வழிவகுக்கக்கூடியது அவரது இந்தக்  கண்டுபிடிப்பு..

அண்மையில் என் நண்பனொருவனுடன் உரையாடுகையில் சபேசன்  சாவகச்சேரி மற்றும் யாழ்   இந்துவின் மைந்தன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன், ஈழத்தமிழன் என்பதற்கப்பால் அவரது கண்டுபிடிப்பு என்ன  என்பது  பற்றி   தமிழில் எங்கள் ஊடகங்களும்,நாங்களும் வாய்திறக்கின்றோமில்லையே என ஆதங்கப்பட்டுக்கொண்டான்.

youtubeல் இன்று உலாவருகையில் அவரது சுவாரஸ்யமான தமிழ் தொலைக்காட்சி உரையாடல் ஒன்று சிக்கியது.தனது ஆராய்ச்சி, தனது இளமைக்காலம், கற்ற கல்லூரிகள், கற்பித்த ஆசிரியர்கள்(வாத்திமார் ;-) )பற்றியெல்லாம் மனந்திறந்து சுவாரஸ்யமாக  உரையாடியிருக்கிறார்.


நேர்காணலின் எஞ்சிய பகுதிகளைப் பார்வையிட
பகுதி 2,  பகுதி 3,  பகுதி 4பகுதி 5


Monday, June 20, 2011









புள்ளிகள் தானா "உண்மை "..??


உண்மை என்றால் என்ன உண்மை என்று உலகில் ஏதாவது ஒன்று உள்ளதாஉண்மையை தேடி நாம் அலைகிறோமா? .. அல்லது சங்கரரின் மாயா வாதம் போல எல்லாம் பொய் தானா?? but பொய் என்று ஒன்று இருக்க வேண்டுமானால் உண்மை என்று ஒன்று இருந்தே ஆக வேண்டும் ... becauseதற்போதைய அறிவுக்கு எட்டிய வகையில் எல்லாம் "சார்ந்தவையே".. (ஐன்ஸ்டீனின் கொள்கை இன்னும் முறியடிக்கப் படவில்லை .. ஆகவே அதை சரியெனக் கொள்வோம் )..


கணித ரீதியில் உள்ள உண்மைகள் ...தூய கணிதத்திலே சிலவற்றை "வெளிப்படை உண்மைகள்" என்று சொல்வோம்.... அதைவிட 1 +2 =3 .. போன்றவைகளும் கணித ரீதியில் உண்மைகள் .. ஆனால் இப்படி யோசித்துப் பாருங்கள் .. ஒரு நாட்டில் எண் வரிசையை 2,4,5,3,9,7,8,1,6.. இவ்வாறு சிறிய வயதிலிருந்து சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் ... அதாவது எங்களது 2 அவர்களது 1 ...எங்களது 4 அவர்களது 2 ... எங்களது 5 அவர்களது ... so , அவர்களிடம் கேட்டால் 2+4=5 என்று தான் சொல்வார் ... எங்களுக்குப் பிழையாகத் தோன்றும் ஒன்று அவர்களைப் பொறுத்தவரை சரி.. இந்த எளிய உதாரணம் மூலம் நாம் ஒரு பெரிய தத்துவத்தை எளிதில் விளங்கி கொள்ளலாம் .. அதாவது ....
 உண்மைகள் எல்லாவற்றுக்கும் ஒரு Frame உண்டு... அந்த Frame இல் மட்டுமே .. அந்த உண்மை செல்லுபடியாகும் ... அதற்று வெளியே அது பொய் ... அல்லது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது ....

எனக்கு அவள் பச்சை ... உனக்கு அவள் மஞ்சள் ....
ஒரு இலையை எடுத்துக் கொள்ளுங்கள் ... சின்ன வயதிலிருந்தே அம்மா முதல் எல்லாரும் அதை பார்த்து பச்சை நிறம் என்று கூறியிருப்பார்.. so எனது மூளையில் உள்ள operating system இவ்வாறு codes  எழுதிக் கொள்ளும் ... " இப்ப நீ பாக்கிறது மாதிரி ஒரு நிறத்துக்குப் பெயர் தான் பச்சை .." (இப்பொழுது கண்ணில் விழும் போல ஒரு விழுந்தால் அதை பச்சை என்று உணர் )
ஆனால் அந்த பச்சைகுரிய தன்மை எனது மனதினாலேயே தீர்மானிக்கப் படும் ... அந்த தன்மை ஆளாளுக்கு வேறுபாடும் .. அதாவது பச்சை என்று நினைக்கும் போது உடனே உங்கள் மனதில் தோன்றும் நிறம் இன்னொருவர் சிவப்பு என்று நினைக்கும் போது அவர் மனதில் தோன்றும் நிறத்துக்கு சமமாக இருக்கலாம் ... 
கணணி அறிவுள்ளவர்களுக்கு இதை
இவ்வாறு விளக்கலாம் ....
ஆக இருவர் ஒரு பொருளை பாக்கிறார்கள்... இருவரும் அதன் நிறத்தை சரியாகச் சொல்கிறார்கள் .... ஆனால் உண்மையில் அவர்கள் இருவருக்குள்ளும் நடந்த processing வேறு வேறு .... இதை உணர்ந்து கொள்வது கடினம் ... சிறிது ஆழ்ந்து சிந்தித்தல் விளங்கும் .... இவ்வாறே "ருசி" களும் ... எல்லோரும் "தேன்" குடிக்கிறோம் .. உடனே "இனிக்குது" என்கிறோம் ... எமக்கு தேன் தரும் ருசிக்குப் பெயர் இனிப்பு என்பது சின்ன வயதிலிருந்து சொல்லித்தரப் பட்டுள்ளது .... இந்த தேன் தரும் ருசியை நான் உணரும் உணர்ச்சி ஆனது கத்தரிக்காய் தரும் ருசியை நீங்கள் உணரும் உணர்ச்சிக்கு சமமாக இருக்கலாம் ...

உண்மைகள் பற்றிய இப்படியான விடயங்கள் தொடரும் ....
ஆம்!! கேள்விக் குறிக்கு அடியில் ஏன் புள்ளடி வந்திருக்கும் ..?? கையொப்பங்களை ஏன் அநேகமானோர் புள்ளடி உடன் தான் முடிக்கின்றனர் ??.... அநேகமானோர் சிறு கோடு ஒன்று வெறுங்கையால் கீறும் போது முடிவில் ஏன் டக் எண்டு ஒரு குத்து போடுகிறார்கள் .... ???ஆம் இவை அனைத்தும் தன்னை அறியாமல் போடப்படும் குத்துக்கள் .... அவ்வாறே எங்களை அறியாமல் எங்களுக்கு தெரியாமல் "உண்மை" ஒன்று உண்டு ... அது புள்ளி போலத்தான் இருக்க வேண்டும் ... இருந்துகொண்டிருக்கிறது ....

மீள்பதிவு ;-)





Monday, June 13, 2011









புற்றுநோய்க்கெதிரானதொரு பாரிய போர்..


அண்மைக்காலமாக யாழ்குடாநாடு அடங்கலாக இலங்கையின் வடக்குக் கிழக்கு பகுதிகளில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் தொகை துரித கதியில் அதிகரித்தவண்னமுள்ளது. செயற்கை அனர்த்தங்களாலான உயிர்ப்பலி இப்போது இப்பகுதிகளில் குறைவடைந்துள்ள போதும் மறுபுறம் புற்று நோயால் பீடிக்கப்பட்டு உயிரிழப்போர் தொகை அதிகரித்திருப்பது பலராலும் கவலையுடன் நோக்கப்பட்டு வருகின்றது.அதிலும் பலர் சிறுவயதிலேயே இப் பாதிப்பை எதிர்கொள்வது தான் பெருஞ் சோகம்.

இப்போது இலங்கையில் இலவச புற்றுநோய்ச் சிகிச்சைக்கான பெருமளவு வசதிகளுடனான வைத்தியசாலை மகரகம பகுதியிலே அமைந்துள்ளது.தொலை தூரத்திலுள்ள இவ் வைத்தியசாலைக்கு வருகைதர அப் பகுதி மக்கள் பலத்த இடர்பாடுகளைச் சந்தித்தவண்ணமுள்ளனர்.இவற்றைத் தவிர்க்க யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுவர்களிற்கான புற்றுநோய் சிகிச்சைக்கென சகல வசதிகளுடனான ஒரு பிரிவினை நிறுவும் நோக்கத்திற்க்காக colours of courage trust அமைப்பினால் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள் திரட்டும் பாரியதொரு முன்னெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இதன் ஒரு கட்டமாக தேவேந்திரமுனை தொடக்கம் பருத்தித்துறை வரையிலான 670 Km தூர பாரிய நடைப்பயணமொன்று எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கு ஒத்துழைக்க இலங்கைக் கிறிக்கெற் அணித்தலைவர் டில்சான், மகெல ஜெயவர்த்தன போன்றோர் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புற்று நோய்க்கு எதிரான இப் பாரிய போராட்டத்திற்கு நீங்களும் நிதி ரீதியாகவோ அல்லது ஏனைய வழிகளிலோ பங்களிக்க விரும்பினால் விபரங்களிற்காக இங்கே சொடுக்குங்கள்



உத்தியோகபூர்வ இணயத்தள முகவரி:-  Trail
twitter:- TrailSL





Sunday, May 29, 2011









என்னைக் கவர்ந்த சங்கர் மகாதேவன் ..


யாழ் இந்துவில் நான் ஒன்பதாம் ஆண்டு கற்றுக் கொண்டிருந்த காலம்.ஏதோவொரு நாடகப் பயிற்சியிலீடுபட்டுக் கொண்டிருந்தபோது.. 
உடனே நான் ஏதோ பெரிய நடிகன் என்றெல்லாம்  முடிவு எடுத்துவிடக்கூடாது.. பாடவேளைகளில் உத்தியோகபூர்வமாக வகுப்பிலிருக்காமல் 
கடத்துவதற்காக நாங்கள் தெரிவு செய்திருந்தவோர் உத்தி தான் இந்த நாடகங்களில் நடிப்பது..நாடகப் பயிற்சி முடிவடைந்தாலும் பின்னர் நாங்கள்
வகுப்பறைப் பக்கம் எட்டிப் பார்ப்பதேயில்லை என்பது வேறு விடயம்.. இவ்வாறு கிடைக்கும் இடை வேளைகளில் ஒரே கூத்தும் கும்மாளமும் தான்..

இந்த வேளைகளில் நாம் ஆரம்பித்தது தான் உடைந்துபோன கதிரை மேசைகளின் பலகைகளை முறித்தெடுத்து துடுப்பாகவும் டஸ்ரரை பந்தாகவும் கொண்டு கிறிக்கெற் அடிப்பது..இந்தப் போட்டிகளைக் கூட சில சமயங்களில் வாழ்வா சாவா போட்டிகளாக நாம் உத்வேகம் கொண்டு ஆடியது இப்போது நினைத்தால் சிரிப்புத் தான் வரும்.. பல சமயங்களில் புண்ணியலிங்கம் சேரிடம் சிக்கி எல்லோரும் செய்வது போல விபூதி வேட தாரியாகச் சென்று தப்பித்தது பலமுறை.. இப்படியான எங்கள் குழுவில் எல்லோரும் பாட்டுப் 
பாடக் கூடியவர்கள்..அதற்கேற்ற குரல் வளமும் உடையவர்கள்..ஹிஹி..என்னைத் தவிர..இடையிடையே சினிமாப் பாடல்களைப் பாடிக் கும்மாளமடிப்பதும் நடக்கும்..

இவ்வாறான ஒரு கும்மாளத்தின்போது என் நண்பனொருவனால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் சங்கர் மகாதேவன்..சந்தணத் தென்றலே பாடல் என்று நினைக்கிறேன்.அன்றிலிருந்து சங்கர் மகாதேவனின் பாடல்களைத் தேடிக் கேட்கத் தொடங்கினேன்.அவரது குரலில் அப்படி ஏதோவொரு ஈர்ப்பு இருக்கிறது.அதிலும் உச்ச வீச்செல்லை கொண்ட
கிறங்கடிக்கும் அவரது குரலும் இதற்கு ஒரு காரணமாயிருக்கலாம்.. அனுபவித்து தமிழில் பாடல்களைப் பாடும் பாடகர்களில் பிரதானமாக இவரையும் நான் குறிப்பிட்டுச் சொல்வேன்.மும்பையில் பிறந்த தமிழ் பேசும் கேரள அந்தணக் குடும்பப் பின்ணணியும் இதற்கு சங்கர் மகாதேவனிற்குத் துணை புரிந்திருக்கலாம்.


இசைப்புயல் ரகுமானின் இசையில் சங்கர் மகாதேவன் சங்கமம் பாடிய ”வராகை நதிக்கரையோரம்.. “ எனும்  மெலிதான ஹிந்துஸ்தானி கலந்த கிராமியப் பாடல் மெட்டுக் கொண்ட இந்தப் பாடல் மூலம் முதல் தமிழ் இசை ரசிகர்களைத் திரும்பிப்பார்க்கச் செய்தார். ஹிந்துஸ்தானி, கர்நாடக இசை என்பவற்றில் இவருக்குள்ள தேர்ச்சியை இவரது பாடல்களிலே நாங்கள் இனங்கண்டு கொள்ளலாம்.

தொடர்ந்து இவரது உச்சஸ்தாயி குரலை இனங்கண்டு இசைப்புயல் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் வழங்கிய பாடல் தான் இல்லையென்று சொல்ல ஒருகணம் போதும்..அந்தப் பாடலில் உணர்ந்து அனுபவித்து உச்சவீச்சுக்கு இடையிடையே சென்று  தமிழ் இசை ரசிகர்களை வசீகரித்தார் சங்கர் மகாதேவன்.. அந்த ஆண்டிற்கான சிறந்த பாடகரிற்கான தேசிய விருதையும் சங்கர் மகாதேவனிற்குத் தேடிக்கொடுத்தது இந்தப் பாடல்.

இசைப்புயல் தவிர யுவன் சங்கர் ராஜா சங்கர் மகாதேவனை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பாடல் தான் என் அன்பே..என் அன்பே.. இயக்குனர் அமீரின் முதல் படமான மோனம் பேசியதே திரைப்படத்திற்காக பாடிய பாடல் தான் அது..ஓ சகி .. பிரிய சகி யென வேறு வேறான வீச்செல்லைகளுடன் இந்தப் பாடலில் உருகியிருந்தார் சங்கர் மகாதேவன்.. யுவனும் அதற்கேற்ற மெலிதான வாத்திய இசைகொண்ட மெலடியாக  அந்தப் பாடலை உருவாக்கியிருந்தார்.

இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் சங்கர் மகாதேவனை உபயோகித்துக் கலக்கிய பாடல் தான் சங்கரின் அந்நியன் படத்தில் இடம்பெற்ற குமாரி.. வித்தியாசமான உச்சரிப்புடன் அந்தப் பாடலைப் பாடிக் கலக்கியிருப்பார் சங்கர் மகாதேவன்..இசையமைப்பாளர் வித்தியாசாகர் சங்கர் மகாதேவனுடன் இணைந்து திருமலை படத்திற்காகப் பாடிய நீயா பேசியது.. பாடலைக் குறிப்பிடலாம்.இவ்வாறு சங்கர் மகாதேவன் தமிழில் கலக்கிய பாடல்களைக் கூறிக்கொண்டே போகலாம். சங்கர் மகாதேவனின் உச்சஸ்தாயி குரலை நடிகர்களின் அறிமுகப் பாடல்களிற்கு உபயோகிக்கும் ஒரு பாணியே ஒரு காலத்தில் தமிழ் சினிமாவிலிருந்தது.

இன்று பல ஹிந்தித் திரைப்படங்களிற்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் சங்கர் மகாதேவன் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய படம் தான் கமலின் ஆளவந்தான்..துரதிஸ்டவசமாக அந்தப் படத்தின் தோல்வி அவரை தமிழில் இசையமைப்பாளராகத் தொடர அனுமதிக்கவில்லைப் போலும்...

2010இல் சங்கர் மகாதேவன் அக்கடமி எனும் பெயரில் சங்கீத  அக்கடமியை ஆரம்பித்து ஹிந்துஸ்தானி, கர்நாடக இசைப் பயிற்சி உட்பட திரையிசைப்பாடலிற்கன பயிற்சியை வழங்கி வருகிறார்.சங்கர் மகாதேவனின் பிரபல அல்பம் Breathless..அதிலே முழுமையான பாடலையே மூச்சுவிடாமல் பாடுவதுபோன்று ஒலிச்சேர்க்கை சேர்த்திருந்தார்கள் .
அந்தப் பாடல் இங்கே கேட்கலாம்..











Tuesday, May 24, 2011









ராஜ் ராஜரட்ணம்..சிக்கியது எவ்வாறு ..??


ராஜ் ராஜரட்ணம்..
அண்மைக்காலமாக ஊடகங்களில் அதிகம் உபயோகிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று.
Gallean Group இன் நிறுவுனர்..
இலங்கையில் பிறந்து நியூஜோர்க்கில் வாழ்ந்தவொரு தமிழர் ...
பங்குச் சந்தை வியாபாரத்தின் மூலம் அமெரிக்காவின் முன்ணணி பணக்காரர்களில் ஒருவராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்....


87 000 அமெரிக்க டொலர்களை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தேர்தல் பிரசாரத்திற்காக வழங்கியவர்.ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை முன்ணாள் போராளிகளின் புனர்வாழ்விற்காக ஒதுக்க முன்வந்தவர்.இலங்கையில் 2004 சுனாமி அன்ர்த்தத்தின் பின்னான புனருத்தாரண பணிகளிற்கு உதவியதோடு மட்டுமல்லாமல் மிதிவெடியகற்றும் பணிகளிற்குப் பெருமளவில் உதவியவர்..

ஒக்ரோப்ர் 2009 காலப்பகுதியில் FBI யினால் இரகசியமான முறையில்  IBM போன்ற பல்வேறு பிரபல பொதுக் கம்ம்பனிகளிலுள்ள தனது நண்பர்கள் அல்லது கைக்கூலிகள் மூலம் அக் கம்பனிகளின்   சாதாரண வெளி நபர்களிற்குத் தெரியாத பெறுமதியான உள்வீட்டு தகவல்களைப் பெற்று அதற்கேற்ப பங்குச் சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டு பெரும் இலாபமீட்டினார் என்று குற்றச்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். பின்னர் பிணையில் வெளியேவந்து தன் மீதன குற்றச்சாட்டிலிருந்து வெளிவரக் கடுமையாகப் போராடினார் ராஜ்.

இந்த மாதம் 11ந் திகதியளவில் அவருக்கெதிராக  14 குற்றச்சாட்டுக்கள்  அமெரிக்க நீதி மன்றத்தில் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் ராஜ்ஜிற்கு தனது எங்சிய  வாழ்நாளை சிறையில் கழிக்கவேண்டிய அபாயம் நேர்ந்துள்ளது.இந்த 14 குற்றச் சாட்டுக்களில் 9 குற்றச்சாட்டுக்கள் சட்டவிரோத உள்வியாபாரத்திற்காகவும் எஞ்சிய 5 குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்ட சதி என்றமுறையிலும் நிரூபிக்கப்பட்டுள்ளன.எது எவ்வறாயினும் ராஜ்ஜின் சட்டத்தரணி இதனை எதிர்த்து மேன் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் அமெரிக்கப் பொதுமக்களில் ஒரு சாரார் வியாபாரப் போட்டி காரணமாக பல பெரும் முதலைகள் இணைந்து ராஜ்ஜை சிக்கவைத்து விட்டது  எனவும்  மறுபுறம் சட்டம் அனைவருக்கும் சமம் என்பது அமெரிக்காவில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டது என பெருமளவானவர்களும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

அரசின் உத்தியோகபூரவ செய்திக் குறிப்பைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்.

ராஜ் மீதான வழக்கு விசாரனை, குற்றச்சாட்டுக்கள் பற்றி இணையத்தில் தேடியபோது அவர் சிக்கியது எவ்வாறு என பல சுவாரசியமான தகவல்கள்  கிட்டின. அவற்றைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்.



Monday, May 16, 2011









பேசும் படம் - Hotel Rwanda


வெசாக் விடுமுறையில் யாழ் வந்து என் நெருங்கிய நண்பனொருவனில் வீட்டில் இராப் பொழுதொன்றைக் கழிக்கையில் தற்செயலாக நாங்கள் பார்த்த திரைப்படம் Hotel Rwanda.. .2005ம் ஆண்டு காலப்பகுதியில் இந்தப் படம் வெளியாகியிருந்தாலும் இப்போது தான் எனக்குப் பார்க்கக் கிடைத்தது.உங்களில் பலர் ஏற்கனவே பார்த்துமிருக்கக்கூடும்.1990 களின் நடுப்பகுதியில் Rwanda வில் நடைபெற்ற ஏறக்குறைய ஒரு மில்லியன் மக்களைக் காவு கொண்ட ஓர் பெரும் இனவழிப்பின்போதான ஓர் உண்மைக் கதையைப் படமாக்கியிருக்கிறார்கள்.

Paul Rusesabagina எனும் ஹோட்டல் முகாமையாளர் ஒருவரது உண்மைக் கதை தான் இது..றுவண்டாவை Belgium  கைப்பற்றி ஆட்சி செய்லையில்  நிர்வாக வசதிகளிற்காக  Tutsi இன மக்களினை முதன்மைப் படுத்திவிட்டு பின்னர் ருவண்டாவைவிட்டு வெளியேறுகையில் பெரும்பான்மை  Hutu மக்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டுச் செல்கிறது . ருவண்டாவில் வாழ்ந்த Tutsi மற்றும் Hutu இன மக்களிடையே ஏற்படு(த்தப்படு)ம்  கலவரம் எவ்வாறு இனவழிப்பாக மாற்றப்படுகின்றது..Paul Rusesabagina தனது குடும்பத்தையும் அவரது ஹொட்டலில் சரணடைந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களையும் காப்பாற்றுவதற்கான ஒரு சாதாரண மனிதனின் அபரிமிதமான போராட்டம் தான் படத்தின் கதை..

கதையினிடையே கலவரங்களைத் தூண்டும் பெருச்சாளிகளின் நிஜ முகங்கள், உசுப்பேத்தல்கள்.. ஐ.நா வின் மீட்பு நடவடிக்கையிலுள்ள ஓட்டைகள்.. மேல் நாட்டவர்களின்(western people)  தங்கள் நலனின் மீதான அதீத அக்கறையும் ஆபிரிக்க மக்கள் மீதான இளக்காரம்..சில நல்ல மனிதர்களின் கையறு நிலமை,ஆற்றாமை, இனவழிப்பு, போர்க் குற்றம் ,ஐ.நா என ஏதேதோ எனப் பல பேசப்படா உண்மைகளைப் படம் பேசிச் செல்கின்றது..

முடிந்தால் Hotel Rwanda வை ஒருமுறை பாருங்கள்..படம் பே(சா/சமுடியா)ப் பொருளை பேசத்துணிந்திருக்கின்றது.


Saturday, April 9, 2011









காலக் கண்ணாடி.. 90களில் யாழ்ப்பாணம்..

அண்மையில் GroundViews இணையத் தளத்தை மேய்ந்து கொண்டிருக்கையில் காணக்கிடைத்த காணொளி..90களில் நான் சிறுவனாயிருந்தபோதும்..இப்போதும் நன்கு நினைவிருக்கின்றது..பொருளாதாரத் தடைகளின் மத்தியில் எமது மக்கள் அன்றாட வாழ்க்கைக்காகப் போட்ட நெருப்பாற்று நீச்சல்..

  • சவர்க்காரத்துக்குப் பதிலாக பனம்பழத்தைப் பாவித்து உடுப்புத் துவைத்தது..
  • ஜாம் போத்தலிலில் விளக்குச் செய்து மண்ணெண்ணெயை உச்சமாகப் பாவித்து குப்பி விளக்கில் படித்தது..
  • வானொலியில் செய்தி கேட்பதற்காக சைக்கிள் (அப்போதைய எங்கள் தேசிய வாகனம்) மிதித்து   தைனமோ சுழற்றியது...

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்..

இவ்வாறாக இப்போதெல்லாம் பேச மறந்தே போய்விட்ட  எமது வாழ்க்கையின் ஒர் காலத்தைப் பேச முயல்கிறது கண்ணன் அருணாசலத்தின் இந்தக் காணொளி..


Kerosene from Kannan Arunasalam on Vimeo.

நன்றி..
GroundView, mooving ImagesKannan Arunasalam


Thursday, January 6, 2011









இணையத்தின் மீதான நம்பிக்கை இழக்கப்படுகிறதா..??

அண்மையில் நண்பன்  ஒருவனுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது உலகமே தனது சகல தேவைகளையும் இணையத்தினூடே வீட்டிலிருந்தவாறே நிறைவேற்றுமளவிற்கு  வந்துவிட்டது.நம்மூரெல்லாம் எப்போது அந்த நிலைக்கு வரப்போகின்றது என அதிகமாகவே ஆதங்கப்பட்டான்.அவன் சொல்வதற்கு மாறாக என் கருத்தைத் தெரிவித்து வழமையாகவே விவாதத்தை ஆரம்பித்துவைப்பேன் (அது தான் என் கருத்தாய் இருந்தால் கூட..) இன்றும் அவ்வாறு தான்... இணையம் ஒன்றும் நில்லையானதும் உறுதியானதுமான நிலையை அடைந்துவிடவில்லை..அதுவும் நம் நாட்டில் இன்னும் அதிகமாகவே..ஆகவே அத்தியாவசிய தேவைகள் எல்லாவற்றையும் நாங்கள் முழுமையாக இணையத்திலேற்றிவிட்டால் அது சிக்கலில்தான் முடியும் என .ஆரம்பித்தேன் என் (கு)தர்க்கத்தை ..அண்மையில்த் தான் வலையில் 2010ல் இணையத் திலேற்பட்ட பிரதான சம்பவங்களையெல்லாம்  தொகுத்திருந்த ஒரு கட்டுரையை வாசித்திருந்தேன்.எல்லாவற்றையும் இழுத்து அவனை உண்டு இல்லை என்றாக்கிவிட்டேன்.நீண்ட காலத்தின் பின் அவனை மடக்கிவிட்ட திருப்தி எனக்கு..கடந்தவருடத்தில் இணையத்திலியங்கும் நிறுவனங்கள் எதிர்கொண்ட சிக்கல்களை இப்போது பார்ப்போம்.



ஏதாவதொரு விடயம் பற்றி அறிவதாயிருந்தால் நாம் உடனே இணையத்தில் அணுகுவது Wikipeediaவைத் தான்.கடந்த பங்குனி மாதமளவில் Wikipeedia சில மணி நேரம் செயலிழந்திருந்தது.Googleஇன் தரவுகளின்படி நாளுக்கு 50 மில்லியனிற்கு மேற்பட்ட வாசகர் வரவு கொண்டது  Wikipeedia . ஆகவே Wikipeedia யாரது கண்ணிலும் படாமல் தனது செயலிழப்பைச் (சில நிமிடங்களாயிருந்தால் கூட) சீர்செய்வது சாத்தியப்படாது . Wikimediaவின்  UKயிலுள்ள தகவல்வழங்கி மிகைசூடாகி ;) (over heated) செயற்பாட்டை நிறுத்தியதைத் தொடர்ந்து வரிசையாக சில செயலிழப்புகள் ஏற்பட்டது தான் இப் பிரச்சினைக்குக் காரணமானது.சில மணிநேரத்தில் இப் பிரச்சினையை அவர்கள் சீர் செய்து விட்டார்கள்.மேலதிக விபரங்களிற்கு அவர்களது  விளக்கம் இங்கே.

நம்மில் பலர்  Wordpress இனை பதிவிடுவதற்கு உபயோகிக்கிறோம்.10மில்லியனிற்கு மேலான பதிவுகள் wordpress மூலமாக இடப்படுகின்றன.Techcrunch போன்ற பல பிரபல பதிவு நிறுவனங்கள் கூட Wordpressஐத் தான் உபயோகிக்கின்றன.கடந்த வருட ஆரம்பத்தில் Wordpress (மாசி மாதமளவில்) இரு மணி நேரத்திற்கு மேலாக சில வலையமைப்பு பிரச்சினைகளால் செயலிழந்திருந்தது.மேலதிக விபரங்களிற்கு அவர்களது  விளக்கம் இங்கே.

Googleஇன் பிரபல மின்னஞ்சல் சேவையான Gmail கடந்த வருடம் மாசி,பங்குனி,புரட்டாதி மாதங்களில் சில சிக்கல்களை எதிர்கொண்டது.ஆயினும் Gmail நிறுவனத்தினர்  இச் சிக்கல்களால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெருமளவு பாவனையாளர்களும் பாதிக்கப்படாமல் தவிர்த்துக்கொண்டனர்.எனினும் குறித்ததொகையிலான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தனராயினும் Google என வருகையில் இது பெருமளவு கவனத்தைப் பல மட்டங்களிலும் ஈர்ப்பது தவிர்க்கமுடியாதது.மேலதிக விபரங்களிற்கு அவர்களது  விளக்கம் இங்கே.

சீனா கடந்த சித்திரை மாதத்தில் 18 நிமிடங்களிற்கு உலகளாவிய இணைய உபயோகத்தின் 15% சதவீத நெரிசலை வலிந்து China Telecom ஊடாக நகர்த்தியிருந்தது.வழமையாக இந்த அளவிலான நெரிசலை சமாளிக்க முடியாமல் செயலிகள் செயலிழந்துவிடும்.ஆனால் China Telecom இதனை திறமையாகக் கையாண்டிருந்தது.இது திட்டமிட்ட நடவடிக்கையா, தற்செயலானதா என்று அக்காலப்பகுதியில் சர்ச்சை எழுந்திருந்தது.ஆனால் எது எவ்வாறானாலும்  சம்பவம் நடந்தது உண்மையானது.மேலதிக விரிவான  விளக்கம் இங்கே.

500மில்லியன் பாவனையாளர்களைத் தன்னகத்தே கொண்டது  Facebook.கடந்த நான்கு வருடங்களில் Facebook சந்தித்த மோசமான சம்பவத்தைக் கடந்த புரட்டாதி மாதத்தில் சந்தித்திருந்தது.ஓர் பின்னூட்ட loop தொடர்ச்சியாகச் செயற்பட்டு அவர்களது databaseஐ கடும் நெரிசலுக்குள்ளாக்கி செயலிழக்கச் செய்தது. இதனை சடி செய்ய facebookகை முழுமையாகவே 2.5 மணிநேரம் நிறுத்திவைக்க வேண்டையதாயிற்று mark zuckembergற்கு..மேலதிக விபரங்களிற்கு அவர்களது  விளக்கம் இங்கே.(havard network அதிகாலை 4 மணிக்கு mark zuckemberkஆல் செயலிழக்கச் செய்யப்பட்ட கதையை Facebookஉருவான கதையில் குறிப்பிட்டிருந்தேன்..இந்த நேரம் zuckemberkற்கு அது தான் நினைவிற்கு வந்திருக்குமென்று யாரும் இங்கே ஆரூடம் கூற முற்பட வேண்டாம்.. ;) ).

மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் தமது கொடுக்கல் வாங்கல்களிற்காக paypal உபயோகிக்கிறார்கள்.ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளிற்கு paypalஇல் தங்கியுள்ளார்கள்.paypal சேவை சில மணி நேரம் செயலிழந்தால் ஏற்படக் கூடிய வியாபார நட்டத்தை எண்ணிப் பாருங்கள்.கடந்த ஐப்பசி மாதமளவில் 4.5 மணி நேரம் Paypal செயலிழந்திருந்தது.மேலதிக விபரங்களிற்கு இங்கே.

கடந்த காற்பந்து உலகக் கின்ண காலத்தில் Twitter பல தடவை செயலிழந்திருந்தது அல்லது மெதுவாகியிருந்தது.மேலதிக விபரங்களிற்கு இங்கே.wikileaks மீது இனைய உலகில் பிரயோகிக்கப்பட்ட நெருக்கடிகளும், Wikileaks ஆதரவாளர்களால் ஏனைய நிறுவனங்களிற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகளையும் ஏற்கனவே wikileaksற்கு ஓர் மாற்றுத் தெரிவு பகுதியில் குறிப்பிட்டதால் இங்கு சேர்த்துக்கொள்ளவில்லை.

இவை யாவும் உலகப் பிரசித்தி பெற்ற இணையத்திலியங்கும்  நிறுவனங்கள் கடந்த வருடத்தில் மட்டும் எதிர்கொண்ட நெருக்கடிகள்.இவை இணையம் இன்னும் ஓர் நிரம்பலான நிலைதகு நிலையை அடையவில்லையோ என்ற சந்தேகம் பலரிற்கு எழச் செய்த சம்பவங்கள்.. எது எவ்வாறானாலும் இச் சிறு சிறு சம்பவங்களால் அந்த நிறுவனங்கள் ஒன்றும் செயலிழந்துவிடவில்லை.தம்மை சீர் செய்துகொண்டு சில மணி நேரங்களிலேயே வழமைக்குத் திரும்பிவிட்டன என்பது தான் இங்கே கவனிக்கப் பட வேண்டியது.



Tuesday, January 4, 2011









உங்கள் முன்னாலுள்ள பாரிய சவால்கள்..

பெற்றோர்களே..!!
உங்கள் தண்டனைகளை நீங்கள் புதுப்பித்தேயாக வேண்டும்.மரபு வழித் தண்டனைகள் இனி வேலைக்காகாது..


நாளைய இளைஞர்களே..!!
நாளை உங்கள் பெற்றோர் உங்களுக்கு Facebookஇல் friend request அனுப்பினால் என்ன செய்வீர்கள்..!! ??சிந்தியுங்கள்..செயற்படுங்கள்..

ஏதோ எங்களால் முடிந்த உதவி ;)

எங்கள் சிபாரிசு..
புதிது புதிதாய் எதனையெல்லாமோ புகுத்தும் நீங்கள் ஏன் இப்படியொரு வசதியையும் அறிமுகப்படுத்தக்கூடாது..??



நாளை நாமும்..
இன்று இவர்..நாளை நாமும் கூட..


உங்கள் கணனி அடிக்கடி செயலிழக்கிறதா..??
கவலையை விடுங்கள்.. இனி மேல் நீங்களும் கணனி திருத்துவதில் விற்பன்னர் தான்..

பிற்குறிப்பு: குப்பிறப் படுத்திருந்து இவ்வாறெல்லாம் சிந்தித்தது நான் அல்ல..

நன்றி: abstrusegoose,coolmaterialendlessorigamistrikegentlygraphjam