Pages

Subscribe Twitter Twitter

Sunday, July 10, 2011









விஞ்ஞானி சபேசன் மனம் திறக்கிறார்..

அண்மைக்காலமாக எங்கள் Facebook பக்கமெங்கும் பரபரப்பாக  வியாபித்திருக்கும் பெயர் தான் சபேசன் சிதம்பரநாதன்.. எங்கள் காலத்தில் எங்கள் கல்லூரியில்  கற்றவர் என நாமெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்ள வழிவகுத்தவர்..

 மலிவு விலையில் ஒருவர் இருக்கும் இடத்தை  உடனடியாக அறிந்துகொள்ளக்கூடியதொரு பொறிமுறையை கண்டுபிடித்ததன்மூலம்  உலகின் கவனத்தைத் தன்பக்கம் திருப்பிய ..வயதில் இன்னும் இருபதுகளிலேயேயுள்ள இளைஞன்.. விமான நிறுவனங்கள் பலவும் தங்கள் செலவை மில்லியன் கணக்கில் குறைத்துக்கொள்ள வழிவகுக்கக்கூடியது அவரது இந்தக்  கண்டுபிடிப்பு..

அண்மையில் என் நண்பனொருவனுடன் உரையாடுகையில் சபேசன்  சாவகச்சேரி மற்றும் யாழ்   இந்துவின் மைந்தன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன், ஈழத்தமிழன் என்பதற்கப்பால் அவரது கண்டுபிடிப்பு என்ன  என்பது  பற்றி   தமிழில் எங்கள் ஊடகங்களும்,நாங்களும் வாய்திறக்கின்றோமில்லையே என ஆதங்கப்பட்டுக்கொண்டான்.

youtubeல் இன்று உலாவருகையில் அவரது சுவாரஸ்யமான தமிழ் தொலைக்காட்சி உரையாடல் ஒன்று சிக்கியது.தனது ஆராய்ச்சி, தனது இளமைக்காலம், கற்ற கல்லூரிகள், கற்பித்த ஆசிரியர்கள்(வாத்திமார் ;-) )பற்றியெல்லாம் மனந்திறந்து சுவாரஸ்யமாக  உரையாடியிருக்கிறார்.


நேர்காணலின் எஞ்சிய பகுதிகளைப் பார்வையிட
பகுதி 2,  பகுதி 3,  பகுதி 4பகுதி 5


4 comments:

ARV Loshan said...

வாழ்க சபேசன்.. இவர் பற்றி (சுருக்கமாக) அண்மையில் எனது விடியல் நிகழ்ச்சியில் சொல்லி இருந்தேன்..

sinmajan said...

அந்த விடியலைத் தவறவிட்டுவிட்டேனே
லோசன் அண்ணா !!

ம.தி.சுதா said...

மன்னிக்கவும் சின்மஜன் இந்தப் பதிவை வேறொருவர் எழுதியதாக நினைத்து அவரை புகழ்ந்து விட்டேன்....

sinmajan said...

அண்மையில்தான் நானும் அவதானித்தேன்.. பரவாயில்லை.விடுங்கள் :-)