வெள்ளாட்டு மந்தைக் கூட்டம்..
அமைதியாய்ச் சிங்கம்..
நாதியற்று நடுத்தெருவில் நரிகள்..
முள்வேலியற்ற முகாம்கள்
மாதிரிக் கிராமங்கள்..
யாருமற்ற சிறைச்சாலை
தொல்பொருட்சாலை..
சமச் சீரான தராசு..
பீரங்கியில் ஊங்சல்..
குதூகலமானதோர் குடும்பம்..
படுகொலைச் செய்தியேயில்லாத நாளிதள்..
ஆர்ப்பாட்டங்களேயற்ற தலைநகரம்..
தொடர்ந்து அலறும் தொலைபேசி..
கலைக்கப்பட்டது தூக்கம் ..
விழிகளின் ஓரமாய் வடியும்
ஒரு துளி கண்ணீர்..
ஒரு துளி கண்ணீர்..