Monday, July 28, 2014
சிதறிய கண்ணாடித் துண்டுகளின் முகவரிகள்...
Email This BlogThis! Share to X Share to Facebook
Friday, December 10, 2010
எண்ணத்தெரிந்தவர்கள் மற்றும் எண்ணத் தெரியாதவர்கள் என உலகத்தில் உள்ளவர்களை மூன்றாக வகைப்பட்டுத்த முடியும்.
Email This BlogThis! Share to X Share to Facebook
Friday, September 24, 2010
எண்ணத்தெரிந்தவர்கள் மற்றும் எண்ணத் தெரியாதவர்கள் என உலகத்தில் உள்ளவர்களை மூன்றாக வகைப்பட்டுத்த முடியும்.

உலகவரலாறு வழமைபோன்று தனது பிடிவாதமான பாதையில் சற்றும் தளராமல் மனிதர்களைப் பணயமாக வைத்து போய்க்கொண்டிருக்கிறது. இஸ்லாமின் இறைத்தூதரின்(முகம்மது நபி- Peace be upon him) உருவத்தை காட்டுன்னாக(Cartoon) வரைந்து 'ஒருவிதமான' பாராட்டு மற்றும் எதிர்ப்பை பெற்றுக்கொண்ட டென்மார்க் கேலிச்சித்திரஒவியர் தற்போது அவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளாராம். ஐக்கிய இராச்சியத்திற்கு விஐயம் மேற்கொண்ட பாப்பாண்டவர் உலகத்தில் மதச்சார்பற்றவர்களின்(Secular) ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்றுதிரளவேண்டும் எனக்கூறி, "தான் கண்ட நாசிசத்தை" தன் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டி, அரியணையிலுள்ளோர் ஆட்சிபுரிவோரிடம் தனது மனக்கவலையை கொட்டித்தீர்த்துள்ளார். இன்றைய யூதர்களுக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையும் அக்கறையும் இல்லையாம். அமெரிக்கா இருக்கும்போது, ஏன் இருக்கவேணும் என திண்ணையில் இருக்கிற நீங்கள் நினைக்கிறது புரியுது எனக்கு.
அது சரி மனிதர்களை பணயமாகவைத்து என்றால் எப்படி? என்கிற உங்கட கேள்வி நியாயம்தான். கேணல் சண்டர்ஸ் (அதுதாங்க KFC கடையிலுள்ள தாத்தா) யாரென்பது இன்றுள்ள அமெரிக்கச் சிறுவர்களுக்குத் தெரியாதாம் ஆனால் KFC என்றால் தெரியாதவர்கள் இல்லையாம். 11 வகையான மூலிகைகளையும் சில வசனைத்திரவியங்களையும் கொண்டு எப்படி வளர்த்த கோழியை "வதைத்து" பின் வறுத்து KFC செய்வது என்பதை வரிக்குவரி ஒரு காகிதத்தில் அதுவும் பென்சிலால கைப்பட எழுதிப்போட்டு, அந்த ஒரேயோரு ககிதத்தையே மூலதனமாகக் கொண்ட நிறுவனம் தான் KFC. இருவருக்குமட்டுமே தெரிந்த இருட்டுச் சுரங்கம் ஒன்றின் அடிவாரத்தில் வைக்கப்பட்டிருகும் காகிதத்தின் துலக்கம் மங்குகிறதாம் என்பது KFCஇன் தற்போதைய கவலை. ஆனால் 60வயதினை கேணல் சாண்டர்ஸ் எட்டும்வரை ஒரு கடைக்காரரும் அவருடைய முறையை எற்றுக்கொள்ளவுமிலையாம், ஏறெடுத்துப் பார்க்கவுமில்லையாம் என்றால் பாருங்களேன். அதேவேளை கலாநிதி ஐயன்ஸ்டைனை எடுத்துக்கொள்ளுங்கள், பெளதீகத் தத்துவஞானி. சார்பியல் கோட்பாட்டினை (சத்தியமாக எனக்கு எதுவும் தெரியாது) இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். வாயைபிளந்த விஞ்ஞானிகள் அவருடைய பிறந்ததினங்களில் எதாவது அதிசயம் நடக்கும் என இன்றும் நம்புகிறார்களாம். ஆனால் "சார்பியல் கோட்பாட்டிற்காக" அவருக்கு நோபல் பரிசு(Nobel Prize) வழங்கப்படவில்லை மாறாக "ஒளி மின் ஆற்றல்(Photovoltaic Effect)" தொடர்பான ஒரு சிறுவிடையத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இப்படி பலகதைகள்தான் இன்று வரலாற்றை சிருஸ்டித்துக்கொண்டு இருக்கிறது. எனவெ இந்த வரலாற்றை விடுவோம். ஒரு உண்மையான மனிதனுக்கும் அவனுடைய அறிவியல்ஞானத்திற்கும் இடையேயான மென்மையான தொடர்புதான் அவனுடைய உண்மையான வரலாறு என்பது எனது நிலைப்பாடு, அது எற்றுக்கொள்ளப்படுகிறதா அல்லது மற்றப்படுகிறதா என்பது தேவையில்லாதது. யாராவது மேலுள்ள படத்தை விளங்கிக்கோள்ளா முடிகிறதா எனப்பருங்கள். அச்சடிக்கும்கருவியின்(Printer) காபன் தூள்(Toner)தான் அது. படுபயங்கரமான பச்சைவீட்டுவிளைவு ஊக்கி என்பது உங்களுக்குத் தெரியும். காபன் தூளில் என்ன மாற்றம் செய்தார்களோ தெரியவிலை பழைய காபன் தூள்மாதிரி இந்த புதிய காபன் தூள் இல்லையாம் ஆனால் ஒரேவிதாமான நேர்த்தியான அச்சாம்... என்னால நம்பவே முடியல, இந்தக் காபன் தூளின் வரலாற்று மாற்றத்தை. நீங்களும் உங்கட நியாயப்படுகளைச் சொல்லவாறமாதிரித் தெரியுது ஆனாலும் தலைப்பை ஒருதடவை வாசியுங்கோ... அப்ப தெரியும் நான் வரலாற்றின் எந்தப்பக்கம் என்று.
Email This BlogThis! Share to X Share to Facebook
Saturday, September 11, 2010
உண்மையான நற்குணமுடைய மனிதனுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று எவருமே இல்லை.

Email This BlogThis! Share to X Share to Facebook
Thursday, September 9, 2010
ஆடுகள் எல்லாம் கழுத்தில் கயிறுடன் பிறப்பதில்லை..! !

Email This BlogThis! Share to X Share to Facebook