Pages

Subscribe Twitter Twitter
Showing posts with label யதார்த்தம். Show all posts
Showing posts with label யதார்த்தம். Show all posts

Monday, July 28, 2014









சிதறிய‌ கண்ணாடித் துண்டுகளின் முகவரிகள்...



from www.bbc.com

உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்றின் மீது பட்டுத்தெறிக்கும் சூரியஒளிக்கதிர்க்கீற்று ஒன்றுக்கு இருக்கும் சுதந்திரத்தை பாதுகாப்பதாக எண்ணியபடி, சற்று நேரம்முன்பு வெடித்துச் சிதறிய எறிகணையினால் சிதைந்த வாழ்விடமொன்றில் இருந்து வெளிப்பட்ட ஒரு கண்ணாடி துண்டுக்கு அபயமளித்த பாலஸ்தீனநிலம் இன்முகத்துடன் கந்தகத்தூசினை நுகருகின்றது. ஏறிகணையின் முகவரி "அவர்கள்". யாவும் கற்பனை என்று நிராகரிப்பதனையும், சத்தியம் என்று அளூத்தி உச்சரிப்பதையும் நான் விரும்பவில்லை ஆனால் நல்மனிதர்களின் மெளனம் உலகத்தில் பேரழிவுகளின் திறவுகோல். ஒடிவரும் நீரோடையின் சலசலப்பில் ஒரு மூளை நித்திரையில் இருக்கும் அவனுக்கு தெரியாமல் ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டு மும்மணினேரம் முன்பு அவ் ஓசைமீது அவன் எரிந்துவிழுந்த போது பதியப்பட்ட "ஞாபகஇழையின்" தழும்புக்கு மருந்து தடவிக்கொண்டிருக்கிறது. ஓவ்வொரு நாள் காலையின் துயில்ழெழும் வேளையிலும் அவன் அந்த ஓசையினை வெறுப்பதே இல்லை.  
உதவி என்ற செயல் ஒன்றே உலக‌ இயக்கத்திற்க்கு காரணகர்த்தாவாகின்றது என்பது எனது நிலைப்பாடு. இடைவெளியின் பின் திண்ணையில் தோற்றம்...  சிறுவயதில் "காக்கும் கரங்கள்" என்று வாசித்த ஞாபகம். எங்கும் நீக்கமற‌ நிறைந்திருந்ந்தாலும் இடதுகை அறியாமல் வலதுகை செய்வதே பெரியஉதவியாக இருக்கும் என்று நினைப்பதற்குள் எங்கிருந்தொவந்த ஒட்சிசன் நிறைந்தவாயூ என்பெருமூச்சின் சுவாசமாய் என்னுள் பரவுகின்றது. "ஏணியாயும் தோணியாயும்" உதவிசெய்யும் பலர், மெழுகுவர்தியாக உருக்கும் சிலர், ஆலைமரமாக தாங்குபவர்கள், விளைநிலங்கள் எனஎண்ணற்ற வகையில் பூமி புண்ணியம் செய்கிறது இவர்களின் பெயரால். கண்களை மூடும் இமையால் கண்ணீரை மூடமுடிவதில்லை அதுபோல் ஒவ்வொருவரும் தம் "காக்கும் கரங்களை" நினைக்கும் தருணங்களில் காரணங்களின்றி இதயம் இரைகின்றது. 
அன்னையின்கை, அன்னமிட்டகை, அரவணைத்தகை, தொட்டணைத்தகை, அந்தோ தூரத்தே மனக்கண்ணிற்குத் தெரியும் கைகள் என சிந்தை தெளிவிக்கும் நினைவுகள் ஏராளம். உதவிதான் இறைவன் என்றால் நாஙகள் அவர்ப‌டைப்பு என்று மார்புதட்டி பெருமைகொள்ள நாம் தகுதியானவர்கள் அல்லாவிடின் கடவுள் படைப்பதற்கும், நாம் படைப்பதற்க்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. கூர்ப்புக்கொள்கையின் தக்கனதான் பிழைக்கும் என்று வாதிடும்போதும் உதவிடுதல் என்றசெயல் தவிர்க்கமுடியாதது. மனிதர் செத்துச் செத்து விழுந்தாலும் அவர்காலத்தால் ஈன்றஉதவி உயிர் பெற்று உலாவருகின்றாது, அசைவாடுகின்றது, மனங்களிற்குள் ஊடுருவுகின்றது, மனம் மாற்றுகின்றது. வெள்ளிநிலவின் தண்மைக்கு, என் அதன் "ஆண்மைக்கு" கூட‌, அதன் விகாரமான வதனம்தான் காரணமோ அதுபோல் எண்ணமுயர்ந்த இடத்தில் சிறுபுன்முறுவல்கூட உயிர்காக்கும் உதவியாகின்றாது. 

உலகத்தின் நிம்மதிக்கும் உதவி தேவை... உடைந்த கண்ணாடித்துண்டுகள் ஒன்றுசேர்க்கப்பட்டு ஒரேகுழியில் புதைக்கப்படுகின்றன, கண்ணாடித் தூண்டுகளின் முகவரிகள் காலதிதின் கண்ணாடியாக‌ எதோ ஒருவகையில் உதவி தேடி. ஏன்னைத் தூண்டிய கண்ணாடித் துண்டுகளின் முகவரிகள்... MH17, Gaza Crisis, South Sudan-Food Crisis, Syria Crisis, and many more.


Monday, January 14, 2013









நாங்கள் ஏன் உபயோகிப்பதில்லை..??



நீண்ட காலத்தின் பின் திண்ணையைத் தூசி தட்டுகிறேன்.
அண்மைக்காலமாக ஒரு சந்தேகம்.

காரணம் தான் புரிகிறது  இல்லை.


அண்மையில் அலுவலகத்தில் பணியாற்றும் சீன நண்பரொருவரின் கணினியைப் பார்த்தபோது அதிர்ந்து போனேன்.உலாவி (Browser) முதற்கொண்டு எங்கெல்லாம் சீனமொழியை உபயோகப்படுத்த முடியுமோ அங்கெல்லாம் சீனமொழியை சாதாரணமாகவே உபயோகிக்கிறார்.இத்தனைக்கும் அவரது ஆங்கிலப்புலமை சிறப்பானது.அவர்களில் அனேகர் பொதுவாகவே சீனமொழியைத்தான் கணனி மொழியாக உபயோகப்படுத்துவதைப் பின்புதான் அவதானித்தேன் .
இத்தனைக்கும் Google முகப்புப் பக்கம்  ,Gmail  போன்ற இடங்களிலெல்லாம் தமிழை உபயோகப்படுத்த வாய்ப்பிருந்தும் நான் எதிலும் தமிழைப் பாவனை மொழியாகப் பயன்படுத்துவதில்லை. அறிமுகப்படுத்தப்பட்டபோது சிலகாலம் உபயோகித்திருக்கிறேன்.பின்னர் ஏனோ ஆங்கிலத்திற்கு மாற்றிவிட்டேன்.



இத்தனைக்கும் தமிழை உபயோகப்படுத்துவதைத் தரக்குறைவாக எண்ணுபவன் நான் இல்லை. போதுமான அளாவிற்குத்  தமிழ் புலமையும் எனக்கிருப்பதாகவே எண்ணுகிறேன்.இருந்தும்  ஏன் நான் (நான் மட்டுமல்ல. நம்மில் பெரும்பாலானோர்) தமிழை கணனி பாவனை மொழியாகப் பெரிதாக உபயோகப்படுத்துவதில்லை.

 இதுதான் இப்போ விடைகாண முடியாக் கேள்வியாய் எனக்கிருக்கிறது.

என்ன காரணமாயிருக்கலாம்..??







Saturday, August 20, 2011









அமெரிக்கா.. கருத்து.. மாற்றுக் கருத்து..



உண்மையிலேயே நாமெல்லாம் எமக்கு அருகில், எம்மைச் சூழ எம்மையெல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கின்ற விடயங்களைப் பற்றியெல்லாம் அடிப்படையிலிருந்து அறிந்து வைத்திருக்கின்றோமா என்பதில் எனக்கு நீண்டகாலமாகவே ஒரு சந்தேகம்.

 முதலில் இந்த வீடியோவை ஒரு முறை பாருங்கள்.அவர்களது விடைகளையும் கருத்துக்களையும் அவதானமாகக் கவனியுங்கள்..


சிரிப்பை அடக்கமுடியாதவர்கள் நன்றாகவே சிரித்துவிட்டு விடயத்திற்கு வாருங்கள்.


எங்களில் பலரும் இப்படியானவர்களாக இருப்பது மறுக்க முடியாத உண்மையே.
Facebook ல் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க முற்பட்டுத் தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுபவர்கள் பலரை நீங்கள் கண்டிருப்பீர்கள்.  இந்த வீடியோவை பார்த்ததிலிருந்து எங்கள் நண்பர் குழுவிடையே வழமை போலவே ஆரம்பித்த விவாதமொன்று நீண்டு ..வழமை போலவே முடிவேதும் இல்லாமல் முடிவடைந்துவிட்டது.

அந்த விவாதத்தின் அடிப்படைச் சந்தேகங்கள் இது தான்..

  • எதற்கெடுத்தாலும் தங்கள் கருத்தைக் குறிப்பிடுபவர்கள் இருக்கிறார்களே. அவர்கள் எத்தனை சதவீதமானவர்கள் விடயத்தின் ஆழத்தை புரிந்து  கருத்துத் தெரிவிக்கிறார்கள்..? ?
  • உண்மையிலேயே எல்லா விடயத்திலும் ஒருவனிற்கு சொந்தக் கருத்து இருக்க வேண்டுமா..?? சில விடயங்களில்  தனக்கென சொந்தக்கருத்தெதுவும் இல்லாமல் இருப்பதில் தவறேதுமிருக்கிறதா..?? 
  • மாற்றுக் கருத்து..மாற்றுக் கருத்து என்கிறார்களே.. அப்படி மாற்றுக் கருத்துக் கூறுபவர்களில் ஏறக்குறைய சகலருமே ஏன் எல்லாக்கருத்துக்குமே மாற்றுக் கருத்துக் கூறுகிறார்கள்..?? 
  • எது கருத்து ..??எது மாற்றுக்கருத்து..?? அநேகமானவர்கள் தெரிவிப்பதற்கு மாறாகத் தெரிவிப்பது தானா மாற்றுக்கருத்து..?? ;-)


யாரது..??இப்பவே கண்ணைக் கட்டுதே என்பது..
 சரி சரி .. பிழைத்துப் போங்கள்.



Monday, May 16, 2011









பேசும் படம் - Hotel Rwanda


வெசாக் விடுமுறையில் யாழ் வந்து என் நெருங்கிய நண்பனொருவனில் வீட்டில் இராப் பொழுதொன்றைக் கழிக்கையில் தற்செயலாக நாங்கள் பார்த்த திரைப்படம் Hotel Rwanda.. .2005ம் ஆண்டு காலப்பகுதியில் இந்தப் படம் வெளியாகியிருந்தாலும் இப்போது தான் எனக்குப் பார்க்கக் கிடைத்தது.உங்களில் பலர் ஏற்கனவே பார்த்துமிருக்கக்கூடும்.1990 களின் நடுப்பகுதியில் Rwanda வில் நடைபெற்ற ஏறக்குறைய ஒரு மில்லியன் மக்களைக் காவு கொண்ட ஓர் பெரும் இனவழிப்பின்போதான ஓர் உண்மைக் கதையைப் படமாக்கியிருக்கிறார்கள்.

Paul Rusesabagina எனும் ஹோட்டல் முகாமையாளர் ஒருவரது உண்மைக் கதை தான் இது..றுவண்டாவை Belgium  கைப்பற்றி ஆட்சி செய்லையில்  நிர்வாக வசதிகளிற்காக  Tutsi இன மக்களினை முதன்மைப் படுத்திவிட்டு பின்னர் ருவண்டாவைவிட்டு வெளியேறுகையில் பெரும்பான்மை  Hutu மக்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டுச் செல்கிறது . ருவண்டாவில் வாழ்ந்த Tutsi மற்றும் Hutu இன மக்களிடையே ஏற்படு(த்தப்படு)ம்  கலவரம் எவ்வாறு இனவழிப்பாக மாற்றப்படுகின்றது..Paul Rusesabagina தனது குடும்பத்தையும் அவரது ஹொட்டலில் சரணடைந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களையும் காப்பாற்றுவதற்கான ஒரு சாதாரண மனிதனின் அபரிமிதமான போராட்டம் தான் படத்தின் கதை..

கதையினிடையே கலவரங்களைத் தூண்டும் பெருச்சாளிகளின் நிஜ முகங்கள், உசுப்பேத்தல்கள்.. ஐ.நா வின் மீட்பு நடவடிக்கையிலுள்ள ஓட்டைகள்.. மேல் நாட்டவர்களின்(western people)  தங்கள் நலனின் மீதான அதீத அக்கறையும் ஆபிரிக்க மக்கள் மீதான இளக்காரம்..சில நல்ல மனிதர்களின் கையறு நிலமை,ஆற்றாமை, இனவழிப்பு, போர்க் குற்றம் ,ஐ.நா என ஏதேதோ எனப் பல பேசப்படா உண்மைகளைப் படம் பேசிச் செல்கின்றது..

முடிந்தால் Hotel Rwanda வை ஒருமுறை பாருங்கள்..படம் பே(சா/சமுடியா)ப் பொருளை பேசத்துணிந்திருக்கின்றது.


Thursday, January 6, 2011









இணையத்தின் மீதான நம்பிக்கை இழக்கப்படுகிறதா..??

அண்மையில் நண்பன்  ஒருவனுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது உலகமே தனது சகல தேவைகளையும் இணையத்தினூடே வீட்டிலிருந்தவாறே நிறைவேற்றுமளவிற்கு  வந்துவிட்டது.நம்மூரெல்லாம் எப்போது அந்த நிலைக்கு வரப்போகின்றது என அதிகமாகவே ஆதங்கப்பட்டான்.அவன் சொல்வதற்கு மாறாக என் கருத்தைத் தெரிவித்து வழமையாகவே விவாதத்தை ஆரம்பித்துவைப்பேன் (அது தான் என் கருத்தாய் இருந்தால் கூட..) இன்றும் அவ்வாறு தான்... இணையம் ஒன்றும் நில்லையானதும் உறுதியானதுமான நிலையை அடைந்துவிடவில்லை..அதுவும் நம் நாட்டில் இன்னும் அதிகமாகவே..ஆகவே அத்தியாவசிய தேவைகள் எல்லாவற்றையும் நாங்கள் முழுமையாக இணையத்திலேற்றிவிட்டால் அது சிக்கலில்தான் முடியும் என .ஆரம்பித்தேன் என் (கு)தர்க்கத்தை ..அண்மையில்த் தான் வலையில் 2010ல் இணையத் திலேற்பட்ட பிரதான சம்பவங்களையெல்லாம்  தொகுத்திருந்த ஒரு கட்டுரையை வாசித்திருந்தேன்.எல்லாவற்றையும் இழுத்து அவனை உண்டு இல்லை என்றாக்கிவிட்டேன்.நீண்ட காலத்தின் பின் அவனை மடக்கிவிட்ட திருப்தி எனக்கு..கடந்தவருடத்தில் இணையத்திலியங்கும் நிறுவனங்கள் எதிர்கொண்ட சிக்கல்களை இப்போது பார்ப்போம்.



ஏதாவதொரு விடயம் பற்றி அறிவதாயிருந்தால் நாம் உடனே இணையத்தில் அணுகுவது Wikipeediaவைத் தான்.கடந்த பங்குனி மாதமளவில் Wikipeedia சில மணி நேரம் செயலிழந்திருந்தது.Googleஇன் தரவுகளின்படி நாளுக்கு 50 மில்லியனிற்கு மேற்பட்ட வாசகர் வரவு கொண்டது  Wikipeedia . ஆகவே Wikipeedia யாரது கண்ணிலும் படாமல் தனது செயலிழப்பைச் (சில நிமிடங்களாயிருந்தால் கூட) சீர்செய்வது சாத்தியப்படாது . Wikimediaவின்  UKயிலுள்ள தகவல்வழங்கி மிகைசூடாகி ;) (over heated) செயற்பாட்டை நிறுத்தியதைத் தொடர்ந்து வரிசையாக சில செயலிழப்புகள் ஏற்பட்டது தான் இப் பிரச்சினைக்குக் காரணமானது.சில மணிநேரத்தில் இப் பிரச்சினையை அவர்கள் சீர் செய்து விட்டார்கள்.மேலதிக விபரங்களிற்கு அவர்களது  விளக்கம் இங்கே.

நம்மில் பலர்  Wordpress இனை பதிவிடுவதற்கு உபயோகிக்கிறோம்.10மில்லியனிற்கு மேலான பதிவுகள் wordpress மூலமாக இடப்படுகின்றன.Techcrunch போன்ற பல பிரபல பதிவு நிறுவனங்கள் கூட Wordpressஐத் தான் உபயோகிக்கின்றன.கடந்த வருட ஆரம்பத்தில் Wordpress (மாசி மாதமளவில்) இரு மணி நேரத்திற்கு மேலாக சில வலையமைப்பு பிரச்சினைகளால் செயலிழந்திருந்தது.மேலதிக விபரங்களிற்கு அவர்களது  விளக்கம் இங்கே.

Googleஇன் பிரபல மின்னஞ்சல் சேவையான Gmail கடந்த வருடம் மாசி,பங்குனி,புரட்டாதி மாதங்களில் சில சிக்கல்களை எதிர்கொண்டது.ஆயினும் Gmail நிறுவனத்தினர்  இச் சிக்கல்களால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெருமளவு பாவனையாளர்களும் பாதிக்கப்படாமல் தவிர்த்துக்கொண்டனர்.எனினும் குறித்ததொகையிலான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தனராயினும் Google என வருகையில் இது பெருமளவு கவனத்தைப் பல மட்டங்களிலும் ஈர்ப்பது தவிர்க்கமுடியாதது.மேலதிக விபரங்களிற்கு அவர்களது  விளக்கம் இங்கே.

சீனா கடந்த சித்திரை மாதத்தில் 18 நிமிடங்களிற்கு உலகளாவிய இணைய உபயோகத்தின் 15% சதவீத நெரிசலை வலிந்து China Telecom ஊடாக நகர்த்தியிருந்தது.வழமையாக இந்த அளவிலான நெரிசலை சமாளிக்க முடியாமல் செயலிகள் செயலிழந்துவிடும்.ஆனால் China Telecom இதனை திறமையாகக் கையாண்டிருந்தது.இது திட்டமிட்ட நடவடிக்கையா, தற்செயலானதா என்று அக்காலப்பகுதியில் சர்ச்சை எழுந்திருந்தது.ஆனால் எது எவ்வாறானாலும்  சம்பவம் நடந்தது உண்மையானது.மேலதிக விரிவான  விளக்கம் இங்கே.

500மில்லியன் பாவனையாளர்களைத் தன்னகத்தே கொண்டது  Facebook.கடந்த நான்கு வருடங்களில் Facebook சந்தித்த மோசமான சம்பவத்தைக் கடந்த புரட்டாதி மாதத்தில் சந்தித்திருந்தது.ஓர் பின்னூட்ட loop தொடர்ச்சியாகச் செயற்பட்டு அவர்களது databaseஐ கடும் நெரிசலுக்குள்ளாக்கி செயலிழக்கச் செய்தது. இதனை சடி செய்ய facebookகை முழுமையாகவே 2.5 மணிநேரம் நிறுத்திவைக்க வேண்டையதாயிற்று mark zuckembergற்கு..மேலதிக விபரங்களிற்கு அவர்களது  விளக்கம் இங்கே.(havard network அதிகாலை 4 மணிக்கு mark zuckemberkஆல் செயலிழக்கச் செய்யப்பட்ட கதையை Facebookஉருவான கதையில் குறிப்பிட்டிருந்தேன்..இந்த நேரம் zuckemberkற்கு அது தான் நினைவிற்கு வந்திருக்குமென்று யாரும் இங்கே ஆரூடம் கூற முற்பட வேண்டாம்.. ;) ).

மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் தமது கொடுக்கல் வாங்கல்களிற்காக paypal உபயோகிக்கிறார்கள்.ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளிற்கு paypalஇல் தங்கியுள்ளார்கள்.paypal சேவை சில மணி நேரம் செயலிழந்தால் ஏற்படக் கூடிய வியாபார நட்டத்தை எண்ணிப் பாருங்கள்.கடந்த ஐப்பசி மாதமளவில் 4.5 மணி நேரம் Paypal செயலிழந்திருந்தது.மேலதிக விபரங்களிற்கு இங்கே.

கடந்த காற்பந்து உலகக் கின்ண காலத்தில் Twitter பல தடவை செயலிழந்திருந்தது அல்லது மெதுவாகியிருந்தது.மேலதிக விபரங்களிற்கு இங்கே.wikileaks மீது இனைய உலகில் பிரயோகிக்கப்பட்ட நெருக்கடிகளும், Wikileaks ஆதரவாளர்களால் ஏனைய நிறுவனங்களிற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகளையும் ஏற்கனவே wikileaksற்கு ஓர் மாற்றுத் தெரிவு பகுதியில் குறிப்பிட்டதால் இங்கு சேர்த்துக்கொள்ளவில்லை.

இவை யாவும் உலகப் பிரசித்தி பெற்ற இணையத்திலியங்கும்  நிறுவனங்கள் கடந்த வருடத்தில் மட்டும் எதிர்கொண்ட நெருக்கடிகள்.இவை இணையம் இன்னும் ஓர் நிரம்பலான நிலைதகு நிலையை அடையவில்லையோ என்ற சந்தேகம் பலரிற்கு எழச் செய்த சம்பவங்கள்.. எது எவ்வாறானாலும் இச் சிறு சிறு சம்பவங்களால் அந்த நிறுவனங்கள் ஒன்றும் செயலிழந்துவிடவில்லை.தம்மை சீர் செய்துகொண்டு சில மணி நேரங்களிலேயே வழமைக்குத் திரும்பிவிட்டன என்பது தான் இங்கே கவனிக்கப் பட வேண்டியது.



Friday, December 10, 2010









எண்ணத்தெரிந்தவர்கள் மற்றும் எண்ணத் தெரியாதவர்கள் என உலகத்தில் உள்ளவர்களை மூன்றாக வகைப்பட்டுத்த முடியும்.

உலகவரலாறு வழமைபோன்று தனது பிடிவாதமான பாதையில் சற்றும் தளராமல் மனிதர்களைப் பணயமாக வைத்து போய்க்கொண்டிருக்கிறது. இஸ்லாமின் இறைத்தூதரின்(முகம்மது நபி- Peace be upon him) உருவத்தை காட்டுன்னாக(Cartoon) வரைந்து 'ஒருவிதமானபாராட்டு மற்றும் எதிர்ப்பை பெற்றுக்கொண்ட டென்மார்க் கேலிச்சித்திரஒவியர் தற்போது அவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளாராம். ஐக்கிய இராச்சியத்திற்கு விஐயம் மேற்கொண்ட பாப்பாண்டவர் உலகத்தில் மதச்சார்பற்றவர்களின்(Secular) ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்றுதிரளவேண்டும் எனக்கூறி, "தான் கண்ட நாசிசத்தை" தன் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டிஅரியணையிலுள்ளோர் ஆட்சிபுரிவோரிடம் தனது மனக்கவலையை கொட்டித்தீர்த்துள்ளார். இன்றைய யூதர்களுக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையும் அக்கறையும் இல்லையாம். அமெரிக்கா இருக்கும்போதுஏன் இருக்கவேணும் என திண்ணையில் இருக்கிற நீங்கள் நினைக்கிறது புரியுது எனக்கு.

அது சரி மனிதர்களை பணயமாகவைத்து என்றால் எப்படிஎன்கிற உங்கட கேள்வி நியாயம்தான்.


Sunday, October 17, 2010









கடவுளிடம் இருக்கும் Decryption Key அல்லது Decryption Keyஐ வைத்திருக்கும் கடவுள்.




நீதியே வெல்லும் .... உண்மையே வெல்லும் .. இப்படியான கதைகளை நம்புவர நீங்கள் ??? பாவம் ... இந்த உலகத்தில் அப்பிடி ஒண்டுமே இல்லை .. எல்லாம் randomness ….
விக்கி பீடியா Randomness இவ்வாறு வரையறுக்கிறது :
Governed by or involving equal chances for each of the actual or hypothetical members of a population; (also) produced or obtained by such a process, and therefore unpredictable in detail."
ஆம் இது தான் உண்மையில் நடக்கிறது .... எல்லா செயற்பாடுகளும் இந்த தியரிக்கு ஒத்துப் போகும் ... இல்லா விட்டால் நாங்கள் சிலவேளை ஒரேமாதிரியான நிகழ்சிகளையே கண்டுகொண்டிருப்போம் ... உலகில் பல பேர் ஒரே மாதிரியே இருப்பார் ... ஆண்களும் பெண்களும் ஓரளவு சம எண்ணிக்கையில் பிறப்பதும் இந்த தியரியால் நிறுவப்பட முடியும் .... அவ்வாறே இங்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளும் Randomமாகத்தான் நடக்கின்றன ...

Randomnessக்கும் எதிர்வு கூறப்பட முடியாமைக்கும் இடையிலான வித்தியாசம் ..




ஒருவருக்கு ரண்டம் ஆக தெரியும் ஒரு நிகழ்சித் தொடர் இன்னொருவருக்கு ராண்டமாக தெரிய வேண்டிய அவசியமில்லை ...


Friday, September 24, 2010









எண்ணத்தெரிந்தவர்கள் மற்றும் எண்ணத் தெரியாதவர்கள் என உலகத்தில் உள்ளவர்களை மூன்றாக வகைப்பட்டுத்த முடியும்.


உலகவரலாறு வழமைபோன்று தனது பிடிவாதமான பாதையில் சற்றும் தளராமல் மனிதர்களைப் பணயமாக வைத்து போய்க்கொண்டிருக்கிறது. இஸ்லாமின் இறைத்தூதரின்(முகம்மது நபி- Peace be upon him) உருவத்தை காட்டுன்னாக(Cartoon) வரைந்து 'ஒருவிதமான' பாராட்டு மற்றும் எதிர்ப்பை பெற்றுக்கொண்ட டென்மார்க் கேலிச்சித்திரஒவியர் தற்போது அவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளாராம். ஐக்கிய இராச்சியத்திற்கு விஐயம் மேற்கொண்ட பாப்பாண்டவர் உலகத்தில் மதச்சார்பற்றவர்களின்(Secular) ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்றுதிரளவேண்டும் எனக்கூறி, "தான் கண்ட நாசிசத்தை" தன் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டி, அரியணையிலுள்ளோர் ஆட்சிபுரிவோரிடம் தனது மனக்கவலையை கொட்டித்தீர்த்துள்ளார். இன்றைய யூதர்களுக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையும் அக்கறையும் இல்லையாம். அமெரிக்கா இருக்கும்போது, ஏன் இருக்கவேணும் என திண்ணையில் இருக்கிற நீங்கள் நினைக்கிறது புரியுது எனக்கு.

அது சரி மனிதர்களை பணயமாகவைத்து என்றால் எப்படி? என்கிற உங்கட கேள்வி நியாயம்தான். கேணல் சண்டர்ஸ் (அதுதாங்க KFC கடையிலுள்ள தாத்தா) யாரென்பது இன்றுள்ள அமெரிக்கச் சிறுவர்களுக்குத் தெரியாதாம் ஆனால் KFC என்றால் தெரியாதவர்கள் இல்லையாம். 11 வகையான மூலிகைகளையும் சில வசனைத்திரவியங்களையும் கொண்டு எப்படி வளர்த்த கோழியை "வதைத்து" பின் வறுத்து KFC செய்வது என்பதை வரிக்குவரி ஒரு காகிதத்தில் அதுவும் பென்சிலால கைப்பட எழுதிப்போட்டு, அந்த ஒரேயோரு ககிதத்தையே மூலதனமாகக் கொண்ட நிறுவனம் தான் KFC. இருவருக்குமட்டுமே தெரிந்த இருட்டுச் சுரங்கம் ஒன்றின் அடிவாரத்தில் வைக்கப்பட்டிருகும் காகிதத்தின் துலக்கம் மங்குகிறதாம் என்பது KFCஇன் தற்போதைய கவலை. ஆனால் 60வயதினை கேணல் சாண்டர்ஸ் எட்டும்வரை ஒரு கடைக்காரரும் அவருடைய முறையை எற்றுக்கொள்ளவுமிலையாம், ஏறெடுத்துப் பார்க்கவுமில்லையாம் என்றால் பாருங்களேன். அதேவேளை கலாநிதி ஐயன்ஸ்டைனை எடுத்துக்கொள்ளுங்கள், பெளதீகத் தத்துவஞானி. சார்பியல் கோட்பாட்டினை (சத்தியமாக எனக்கு எதுவும் தெரியாது) இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். வாயைபிளந்த விஞ்ஞானிகள் அவருடைய பிறந்ததினங்களில் எதாவது அதிசயம் நடக்கும் என இன்றும் நம்புகிறார்களாம். ஆனால் "சார்பியல் கோட்பாட்டிற்காக" அவருக்கு நோபல் பரிசு(Nobel Prize) வழங்கப்படவில்லை மாறாக "ஒளி மின் ஆற்றல்(Photovoltaic Effect)" தொடர்பான ஒரு சிறுவிடையத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இப்படி பலகதைகள்தான் இன்று வரலாற்றை சிருஸ்டித்துக்கொண்டு இருக்கிறது. எனவெ இந்த வரலாற்றை விடுவோம். ஒரு உண்மையான மனிதனுக்கும் அவனுடைய அறிவியல்ஞானத்திற்கும் இடையேயான மென்மையான தொடர்புதான் அவனுடைய உண்மையான வரலாறு என்பது எனது நிலைப்பாடு, அது எற்றுக்கொள்ளப்படுகிறதா அல்லது மற்றப்படுகிறதா என்பது தேவையில்லாதது. யாராவது மேலுள்ள படத்தை விளங்கிக்கோள்ளா முடிகிறதா எனப்பருங்கள். அச்சடிக்கும்கருவியின்(Printer) காபன் தூள்(Toner)தான் அது. படுபயங்கரமான பச்சைவீட்டுவிளைவு ஊக்கி என்பது உங்களுக்குத் தெரியும். காபன் தூளில் என்ன மாற்றம் செய்தார்களோ தெரியவிலை பழைய காபன் தூள்மாதிரி இந்த புதிய காபன் தூள் இல்லையாம் ஆனால் ஒரேவிதாமான நேர்த்தியான அச்சாம்... என்னால நம்பவே முடியல, இந்தக் காபன் தூளின் வரலாற்று மாற்றத்தை. நீங்களும் உங்கட நியாயப்படுகளைச் சொல்லவாறமாதிரித் தெரியுது ஆனாலும் தலைப்பை ஒருதடவை வாசியுங்கோ... அப்ப தெரியும் நான் வரலாற்றின் எந்தப்பக்கம் என்று.



Wednesday, September 22, 2010









கேள்விக் குறியின் இறுதியில் உள்ள புள்ளி தானா "உண்மை "..?????


உண்மை என்றால் என்ன ? உண்மை என்று உலகில் ஏதாவது ஒன்று உள்ளதா? உண்மையை தேடி நாம் அலைகிறோமா? .. அல்லது சங்கரரின் மாயா வாதம் போல எல்லாம் பொய் தானா?? but பொய் என்று ஒன்று இருக்க வேண்டுமானால் உண்மை என்று ஒன்று இருந்தே ஆக வேண்டும் ... because தற்போதைய அறிவுக்கு எட்டிய வகையில் எல்லாம் "சார்ந்தவையே".. (ஐன்ஸ்டீனின் கொள்கை இன்னும் முறியடிக்கப் படவில்லை .. ஆகவே அதை சரியெனக் கொள்வோம் )..



கணித ரீதியில் உள்ள உண்மைகள் ...
தூய கணிதத்திலே சிலவற்றை "வெளிப்படை உண்மைகள்" என்று சொல்வோம்.... அதைவிட 1 +2 =3 .. போன்றவைகளும் கணித ரீதியில் உண்மைகள் .. ஆனால் இப்படி யோசித்துப் பாருங்கள் .. ஒரு நாட்டில் எண் வரிசையை 2,4,5,3,9,7,8,1,6.. இவ்வாறு சிறிய வயதிலிருந்து சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் ... அதாவது எங்களது 2 அவர்களது 1 ...எங்களது 4 அவர்களது 2 ... எங்களது 5 அவர்களது 3 ... so , அவர்களிடம் கேட்டால் 2+4=5 என்று தான் சொல்வார் ... எங்களுக்குப் பிழையாகத் தோன்றும் ஒன்று அவர்களைப் பொறுத்தவரை சரி.. இந்த எளிய உதாரணம் மூலம் நாம் ஒரு பெரிய தத்துவத்தை எளிதில் விளங்கி கொள்ளலாம் .. அதாவது ....
உண்மைகள் எல்லாவற்றுக்கும் ஒரு Frame உண்டு... அந்த Frame இல் மட்டுமே .. அந்த உண்மை செல்லுபடியாகும் ... அதற்று வெளியே அது பொய் ... அல்லது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது ....

எனக்கு அவள் பச்சை ... உனக்கு அவள் மஞ்சள் ....
ஒரு இலையை எடுத்துக் கொள்ளுங்கள் ... சின்ன வயதிலிருந்தே அம்மா முதல் எல்லாரும் அதை பார்த்து பச்சை நிறம் என்று கூறியிருப்பார்.. so எனது மூளையில் உள்ள operating system இவ்வாறு codes எழுதிக் கொள்ளும் ... " இப்ப நீ பாக்கிறது மாதிரி ஒரு நிறத்துக்குப் பெயர் தான் பச்சை .." (இப்பொழுது கண்ணில் விழும் போல ஒரு விழுந்தால் அதை பச்சை என்று உணர் )
ஆனால் அந்த பச்சைகுரிய தன்மை எனது மனதினாலேயே தீர்மானிக்கப் படும் ... அந்த தன்மை ஆளாளுக்கு வேறுபாடும் .. அதாவது பச்சை என்று நினைக்கும் போது உடனே உங்கள் மனதில் தோன்றும் நிறம் இன்னொருவர் சிவப்பு என்று நினைக்கும் போது அவர் மனதில் தோன்றும் நிறத்துக்கு சமமாக இருக்கலாம் ...
கணணி அறிவுள்ளவர்களுக்கு இதை
இவ்வாறு விளக்கலாம் ....
ஆக இருவர் ஒரு பொருளை பாக்கிறார்கள்... இருவரும் அதன் நிறத்தை சரியாகச் சொல்கிறார்கள் .... ஆனால் உண்மையில் அவர்கள் இருவருக்குள்ளும் நடந்த processing வேறு வேறு .... இதை உணர்ந்து கொள்வது கடினம் ... சிறிது ஆழ்ந்து சிந்தித்தல் விளங்கும் .... இவ்வாறே "ருசி" களும் ... எல்லோரும் "தேன்" குடிக்கிறோம் .. உடனே "இனிக்குது" என்கிறோம் ... எமக்கு தேன் தரும் ருசிக்குப் பெயர் இனிப்பு என்பது சின்ன வயதிலிருந்து சொல்லித்தரப் பட்டுள்ளது .... இந்த தேன் தரும் ருசியை நான் உணரும் உணர்ச்சி ஆனது கத்தரிக்காய் தரும் ருசியை நீங்கள் உணரும் உணர்ச்சிக்கு சமமாக இருக்கலாம் ...

உண்மைகள் பற்றிய இப்படியான விடயங்கள் தொடரும் ....
ஆம்!! கேள்விக் குறிக்கு அடியில் ஏன் புள்ளடி வந்திருக்கும் ..?? கையொப்பங்களை ஏன் அநேகமானோர் புள்ளடி உடன் தான் முடிக்கின்றனர் ??.... அநேகமானோர் சிறு கோடு ஒன்று வெறுங்கையால் கீறும் போது முடிவில் ஏன் டக் எண்டு ஒரு குத்து போடுகிறார்கள் .... ??? ஆம் இவை அனைத்தும் தன்னை அறியாமல் போடப்படும் குத்துக்கள் .... அவ்வாறே எங்களை அறியாமல் எங்களுக்கு தெரியாமல் "உண்மை" ஒன்று உண்டு ... அது புள்ளி போலத்தான் இருக்க வேண்டும் ... இருந்துகொண்டிருக்கிறது ....


மீள்பதிவு ;-)






Saturday, September 18, 2010









பேசும் புகைப்படங்கள்..












நன்றி:புகைப்படங்கள்: Google,மின்னஞ்சல்களிலிருந்து..


Saturday, September 11, 2010









உண்மையான நற்குணமுடைய மனிதனுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று எவருமே இல்லை.


விஞ்ஞானம் விந்தையானது மட்டுமல்ல, சிலவேளைகளில் அது விசித்திரமானதும் கூட. விமர்சகர்கள் விஞ்ஞானத்தின் 'அவசரத்தன்மை'யை பலவீனமாக எடுத்துக்கொண்டு சூடாக விவாதிப்பதும் உண்டு. இன்றைய விஞ்ஞான விளைவு, வழிகாட்டும் நிலையிலா அல்லது எங்கோ ஒரு திசையில் 'வழிந்தோடும்' நிலையிலா என்பதும் விளங்குவதற்கு சற்றே கடினமாகத்தான் உள்ளது. சரி, அது இருக்கட்டும், திண்ணையில் இருக்கிற 'உங்களோடு' நேரடியாகவே விசயத்துக்கு வாறேன்.
"அதிக மதுபானம் அருந்துவபர்களின் ஆயுட்காலம், மதுபானம் அருந்துவதனை இடை நிறுத்தியவர்களிலும் பார்க்க, அதிகம் ", நான் சொல்லவில்லை, 20 வருடங்களாக 1800பேரைக்(அதிகமானவர்கள் ஆண்கள்) கொண்டு மேற்கொள்ளப்பட்ட ' புள்ளிவிபர ஆராய்ச்சி ' தெரிவிக்கிறது. வாழ்நாளிலே மது அருந்ததவர்கள் இங்கு கருதப்படவுமில்லை, கவலைப்படத் தேவையுமில்லை. ஆராய்ச்சிக் கட்டுரையின் முழு வடிவம் ஆங்கிலத்தில்.
ஆராய்ச்சி முடிவு ஒருபுறம் இருக்கட்டும், சரியா பிழையா என்பது தேவையில்லை, நடக்கிறதை கண்டுகொள்வோம் என்பது எனது நிலை. ஆனால் ஒருவிடயம் மிகவும் முக்கியமானது, என்னவென்றால், ' மது அருந்துவதைக் கைவிட்டவர்கள்(abstainers) ' பற்றியது. இவர்களது மனங்களுக்குள் ஆழ ஊடுருவினால் பின்வரும் 'மனத்தாக்கங்களை' கேட்கமுடியும். கையில காசில்லை, அதனால குடியை நிறுத்திட்டன், என்பவர்கள் சிலவேளைகளில் கழிவிரக்கம் கொள்கிறர்கள். தாம் மதுவுக்கு அடிமையாக காரணமான 'சந்தர்ப்பத்தையோ அல்லது சம்பவத்தையோ', மீட்டுப்பார்த்து தங்களின் கரங்களைக் கட்டிப்போடுகிறார்கள். "ஏனக்கு இவ்வளவு நஷ்டம் எற்பட்டுவிட்டது, மானம் போய்விட்டது" என்று கூறிக்கூறி தங்களின் மது எதிர்ப்பு வலிமையை கூட்டிக்கொள்கின்றனர். இவற்றை எல்லாம் கடந்து தன்னுடன் "கூட மது அருந்தியவர்களையும் / தற்போதும் மது அருந்த வற்புறுத்த்தும் நண்பர்களையும் " இவர்கள் வெறுப்போடு கடந்து செல்கிறார்கள். எனவே இவர்கள் மது அருந்துவபர்களையும் பார்க்க, அதிகமாக தங்களை தாங்களே வருத்திக்கொள்கிறார்கள். வாழ்வுநிறைவு வேகமாக அண்மிக்கிறது.
"உங்களுடைய கோபங்களுக்காக நீங்கள் தண்டிக்கப்படமாட்டிர்கள், மாறாக உங்களுடைய கோபம் தான் உங்களைத் தண்டிக்கும்" என்பது புத்தபெருமான் கூறியதாம். உங்களைத் தண்டிப்பதனை முதலில் நிறுத்துங்கள். முன்பின் தெரியாத, எந்தவித தொடர்பும் அற்ற, முற்றுமுழுதாக அன்னியமான ஒரு மனிதனுக்கும் தன்னால் இயன்ற உதவியை தன் நெருங்கிய நண்பனாகப் பாவித்து செய்யத் தெரிந்தவன் தான் நற்குணமுடைய மனிதன். ஏனவே அவனுக்கு எவருமே நெருங்கிய நண்பர்களாக இருக்க வேண்டியதில்லை. எம்மில் பலர், "கூட்டாக மதுஅருந்துபவர்களை" நெருங்கிய நண்பர்களாகக்கருதுவதும், மதுவை வெறுக்கும் போது 'எதிரிகளாக' நினைப்பதும்(அவர்களிடமிருந்து விலகி இருத்தல்) எமக்கு ஆரோக்கியமானது அல்ல. சமூகக்குடிப்பழக்கம்(social drinking) என்பது எம்மிடமிருந்து விலக்கப்படவேண்டும் என்பத்ற்கு காரணங்கள் உண்டு. உங்களிடமிருந்து விடைபெறும் முன்பு, 'வயிறுமுட்டக் குடிக்கும்' கனவான்களுக்கு ஒரு செய்தி:, நீங்கள் வாழும் காலம் அதிகமாக இருக்கலாம் ஆனாலும் சுயநினைவோடு, வாழ்வை ரசித்து வாழும் காலம் மிகவும் குறைவாகவே இருக்கும். உங்களை நீங்களே அறியாமல், ஞாபகம் இன்றி, பலகாலம் உயிரோடு இரு()ந்துகொண்டிருப்பீர்க்ள்.