Pages

Subscribe Twitter Twitter
Showing posts with label யுதிஸ்ரன். Show all posts
Showing posts with label யுதிஸ்ரன். Show all posts

Monday, June 20, 2011









புள்ளிகள் தானா "உண்மை "..??


உண்மை என்றால் என்ன உண்மை என்று உலகில் ஏதாவது ஒன்று உள்ளதாஉண்மையை தேடி நாம் அலைகிறோமா? .. அல்லது சங்கரரின் மாயா வாதம் போல எல்லாம் பொய் தானா?? but பொய் என்று ஒன்று இருக்க வேண்டுமானால் உண்மை என்று ஒன்று இருந்தே ஆக வேண்டும் ... becauseதற்போதைய அறிவுக்கு எட்டிய வகையில் எல்லாம் "சார்ந்தவையே".. (ஐன்ஸ்டீனின் கொள்கை இன்னும் முறியடிக்கப் படவில்லை .. ஆகவே அதை சரியெனக் கொள்வோம் )..


கணித ரீதியில் உள்ள உண்மைகள் ...தூய கணிதத்திலே சிலவற்றை "வெளிப்படை உண்மைகள்" என்று சொல்வோம்.... அதைவிட 1 +2 =3 .. போன்றவைகளும் கணித ரீதியில் உண்மைகள் .. ஆனால் இப்படி யோசித்துப் பாருங்கள் .. ஒரு நாட்டில் எண் வரிசையை 2,4,5,3,9,7,8,1,6.. இவ்வாறு சிறிய வயதிலிருந்து சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் ... அதாவது எங்களது 2 அவர்களது 1 ...எங்களது 4 அவர்களது 2 ... எங்களது 5 அவர்களது ... so , அவர்களிடம் கேட்டால் 2+4=5 என்று தான் சொல்வார் ... எங்களுக்குப் பிழையாகத் தோன்றும் ஒன்று அவர்களைப் பொறுத்தவரை சரி.. இந்த எளிய உதாரணம் மூலம் நாம் ஒரு பெரிய தத்துவத்தை எளிதில் விளங்கி கொள்ளலாம் .. அதாவது ....
 உண்மைகள் எல்லாவற்றுக்கும் ஒரு Frame உண்டு... அந்த Frame இல் மட்டுமே .. அந்த உண்மை செல்லுபடியாகும் ... அதற்று வெளியே அது பொய் ... அல்லது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது ....

எனக்கு அவள் பச்சை ... உனக்கு அவள் மஞ்சள் ....
ஒரு இலையை எடுத்துக் கொள்ளுங்கள் ... சின்ன வயதிலிருந்தே அம்மா முதல் எல்லாரும் அதை பார்த்து பச்சை நிறம் என்று கூறியிருப்பார்.. so எனது மூளையில் உள்ள operating system இவ்வாறு codes  எழுதிக் கொள்ளும் ... " இப்ப நீ பாக்கிறது மாதிரி ஒரு நிறத்துக்குப் பெயர் தான் பச்சை .." (இப்பொழுது கண்ணில் விழும் போல ஒரு விழுந்தால் அதை பச்சை என்று உணர் )
ஆனால் அந்த பச்சைகுரிய தன்மை எனது மனதினாலேயே தீர்மானிக்கப் படும் ... அந்த தன்மை ஆளாளுக்கு வேறுபாடும் .. அதாவது பச்சை என்று நினைக்கும் போது உடனே உங்கள் மனதில் தோன்றும் நிறம் இன்னொருவர் சிவப்பு என்று நினைக்கும் போது அவர் மனதில் தோன்றும் நிறத்துக்கு சமமாக இருக்கலாம் ... 
கணணி அறிவுள்ளவர்களுக்கு இதை
இவ்வாறு விளக்கலாம் ....
ஆக இருவர் ஒரு பொருளை பாக்கிறார்கள்... இருவரும் அதன் நிறத்தை சரியாகச் சொல்கிறார்கள் .... ஆனால் உண்மையில் அவர்கள் இருவருக்குள்ளும் நடந்த processing வேறு வேறு .... இதை உணர்ந்து கொள்வது கடினம் ... சிறிது ஆழ்ந்து சிந்தித்தல் விளங்கும் .... இவ்வாறே "ருசி" களும் ... எல்லோரும் "தேன்" குடிக்கிறோம் .. உடனே "இனிக்குது" என்கிறோம் ... எமக்கு தேன் தரும் ருசிக்குப் பெயர் இனிப்பு என்பது சின்ன வயதிலிருந்து சொல்லித்தரப் பட்டுள்ளது .... இந்த தேன் தரும் ருசியை நான் உணரும் உணர்ச்சி ஆனது கத்தரிக்காய் தரும் ருசியை நீங்கள் உணரும் உணர்ச்சிக்கு சமமாக இருக்கலாம் ...

உண்மைகள் பற்றிய இப்படியான விடயங்கள் தொடரும் ....
ஆம்!! கேள்விக் குறிக்கு அடியில் ஏன் புள்ளடி வந்திருக்கும் ..?? கையொப்பங்களை ஏன் அநேகமானோர் புள்ளடி உடன் தான் முடிக்கின்றனர் ??.... அநேகமானோர் சிறு கோடு ஒன்று வெறுங்கையால் கீறும் போது முடிவில் ஏன் டக் எண்டு ஒரு குத்து போடுகிறார்கள் .... ???ஆம் இவை அனைத்தும் தன்னை அறியாமல் போடப்படும் குத்துக்கள் .... அவ்வாறே எங்களை அறியாமல் எங்களுக்கு தெரியாமல் "உண்மை" ஒன்று உண்டு ... அது புள்ளி போலத்தான் இருக்க வேண்டும் ... இருந்துகொண்டிருக்கிறது ....

மீள்பதிவு ;-)





Sunday, October 17, 2010









கடவுளிடம் இருக்கும் Decryption Key அல்லது Decryption Keyஐ வைத்திருக்கும் கடவுள்.




நீதியே வெல்லும் .... உண்மையே வெல்லும் .. இப்படியான கதைகளை நம்புவர நீங்கள் ??? பாவம் ... இந்த உலகத்தில் அப்பிடி ஒண்டுமே இல்லை .. எல்லாம் randomness ….
விக்கி பீடியா Randomness இவ்வாறு வரையறுக்கிறது :
Governed by or involving equal chances for each of the actual or hypothetical members of a population; (also) produced or obtained by such a process, and therefore unpredictable in detail."
ஆம் இது தான் உண்மையில் நடக்கிறது .... எல்லா செயற்பாடுகளும் இந்த தியரிக்கு ஒத்துப் போகும் ... இல்லா விட்டால் நாங்கள் சிலவேளை ஒரேமாதிரியான நிகழ்சிகளையே கண்டுகொண்டிருப்போம் ... உலகில் பல பேர் ஒரே மாதிரியே இருப்பார் ... ஆண்களும் பெண்களும் ஓரளவு சம எண்ணிக்கையில் பிறப்பதும் இந்த தியரியால் நிறுவப்பட முடியும் .... அவ்வாறே இங்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளும் Randomமாகத்தான் நடக்கின்றன ...

Randomnessக்கும் எதிர்வு கூறப்பட முடியாமைக்கும் இடையிலான வித்தியாசம் ..




ஒருவருக்கு ரண்டம் ஆக தெரியும் ஒரு நிகழ்சித் தொடர் இன்னொருவருக்கு ராண்டமாக தெரிய வேண்டிய அவசியமில்லை ...


Saturday, October 9, 2010









காமம் என்னும் செசிக்கு காதல் என்னும் பொடி வேணும் ....


இது லம்போரோகினி செசிஸ்.. சில்லால் மட்டுமே அடையாளம் காணக்கூடிய இரும்பு குவியல்....

இதுக்காகத்தானா கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்தும்டெலிவரிக்காக காத்துக் கிடக்கிறார்கள் ..???
ஏதோ உண்மை தான் ...
ஒருசிலசெக்கன்களில் சில நூறு மைல்களை எட்டிப்பிடிக்கும் வேகம் ... லாவகமாகதிருப்பக்கூடிய சக்கரங்கள் ...
எந்த தரைதோற்றத்திற்கும் தாக்குப் பிடித்து ஓடும்கட்டமைப்பு ... எல்லாம் இந்த செசி
ஸ்ன் வேலை தான் ....
ஆனாலும் ஒரு பொடிதேவை ...
எந்திரன் ரஜினி மாதிரி .. என்ன ஒரு லுக்கு ...
அந்த இரும்பு செசிஸ்க்கு அடிச்ச பொடி தான் இது ... பொடி கட்டாயம் தேவை ... பார்க்க ..ரசிக்க ..ஏன் சுகமாய் ஏறிப் பொய் வர ...
ஒரு பொடி தேவை தான் ...
அடிப்படை நோக்கம் சீறிப் பாயும் எஞ்சின் என்றபோதிலும் அதை செயல்ப்படுத்த அல்லது அனுபவிக்க எமக்கு ஒரு அழகிய வசதியான பார்த்தவுடன் கண்ணைப் பறிக்கும் ஒரு வெளித்தோற்றம் தேவை ...


Monday, September 27, 2010









லிப்ட்டும் அவள் லிப்ஸும்..

அன்றொருநாள்..
வழக்கம் போலஒரு காத்திருப்பு..
Lift க்கு முன்னால் ...

1 க்குப் போய் 3 க்குப் போய் G க்குப் போய்..கடைசியாய் வந்தது 4 க்கு ...
What a spark ...!!
வந்தது நீயா.. ?
அன்று ஏதோ விஷேசம் தான் ..
Even though I know u before ..
 Hello!!
உன் லிப்ஸ் திறக்க..
தானாக மூடிக்கொண்டது Lift ...
திருப்பியும் வெயிட் பண்ண வேணும் Lift க்கு ..But இனி
காத்திருப்பு ஒரு சுகம் தான் ..


மீண்டும் ஒரு Lift scene ..
உன் வீட்டு கதவிடுக்கில் நீ ..
Lift ஐ அழுத்திட்டு காத்திருக்கும் நான் ..
இடைநடுவில்
என் கேள்விகளுக்கு
உன் பதில்..
ஒரு உதட்டுச் சுழிப்புத் தான் ...
என் கைகளோ ..
பட்டனை தான் அழுத்திக்கொண்டிருந்தது
..
போய் போய் வந்து கொண்டிருந்தது லிப்ட்,
உன் அம்மா வந்து கூப்பிடும் வரை ..
மனமும் அப்பிடித்தான் ஊசலாடிக்கொண்டிருந்தது,..
யுனி(Uni)யில் ஒரு பாடம் கையில வாங்கும் வரை ...



பின் ஒருநாள்..
வைரமுத்து
எனக்காக எழுதினான்


"உசிரே போகுது ..
.. உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கயில.."
அந்த நேரம் வந்திருந்தால்
Ringin tone ஆக போட்டு
பீலிங்கை ஏத்தியிருக்கலாம்




இப்போதெல்லாம்..
எனக்கு படிகளே
பிடிக்கின்றன ...
உன் Lips லுள்ள கோபத்துக்கு..
என் கண் பட்ட ஆசைக்கு..
துன்பம் அனுபவிக்கின்றன
என் கால்கள்..
பிள்ளைகள் விடும் தவறுக்கு..
அப்பா அம்மா அனுபவிக்கும் துன்பங்கள் போல..

திறப்பதற்காக மட்டும் காத்திருக்கப்படும்.. Lift..

மூடுவதற்காகவும் காத்திருக்கப் படலாம்.. Lips...


Wednesday, September 22, 2010









கேள்விக் குறியின் இறுதியில் உள்ள புள்ளி தானா "உண்மை "..?????


உண்மை என்றால் என்ன ? உண்மை என்று உலகில் ஏதாவது ஒன்று உள்ளதா? உண்மையை தேடி நாம் அலைகிறோமா? .. அல்லது சங்கரரின் மாயா வாதம் போல எல்லாம் பொய் தானா?? but பொய் என்று ஒன்று இருக்க வேண்டுமானால் உண்மை என்று ஒன்று இருந்தே ஆக வேண்டும் ... because தற்போதைய அறிவுக்கு எட்டிய வகையில் எல்லாம் "சார்ந்தவையே".. (ஐன்ஸ்டீனின் கொள்கை இன்னும் முறியடிக்கப் படவில்லை .. ஆகவே அதை சரியெனக் கொள்வோம் )..



கணித ரீதியில் உள்ள உண்மைகள் ...
தூய கணிதத்திலே சிலவற்றை "வெளிப்படை உண்மைகள்" என்று சொல்வோம்.... அதைவிட 1 +2 =3 .. போன்றவைகளும் கணித ரீதியில் உண்மைகள் .. ஆனால் இப்படி யோசித்துப் பாருங்கள் .. ஒரு நாட்டில் எண் வரிசையை 2,4,5,3,9,7,8,1,6.. இவ்வாறு சிறிய வயதிலிருந்து சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் ... அதாவது எங்களது 2 அவர்களது 1 ...எங்களது 4 அவர்களது 2 ... எங்களது 5 அவர்களது 3 ... so , அவர்களிடம் கேட்டால் 2+4=5 என்று தான் சொல்வார் ... எங்களுக்குப் பிழையாகத் தோன்றும் ஒன்று அவர்களைப் பொறுத்தவரை சரி.. இந்த எளிய உதாரணம் மூலம் நாம் ஒரு பெரிய தத்துவத்தை எளிதில் விளங்கி கொள்ளலாம் .. அதாவது ....
உண்மைகள் எல்லாவற்றுக்கும் ஒரு Frame உண்டு... அந்த Frame இல் மட்டுமே .. அந்த உண்மை செல்லுபடியாகும் ... அதற்று வெளியே அது பொய் ... அல்லது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது ....

எனக்கு அவள் பச்சை ... உனக்கு அவள் மஞ்சள் ....
ஒரு இலையை எடுத்துக் கொள்ளுங்கள் ... சின்ன வயதிலிருந்தே அம்மா முதல் எல்லாரும் அதை பார்த்து பச்சை நிறம் என்று கூறியிருப்பார்.. so எனது மூளையில் உள்ள operating system இவ்வாறு codes எழுதிக் கொள்ளும் ... " இப்ப நீ பாக்கிறது மாதிரி ஒரு நிறத்துக்குப் பெயர் தான் பச்சை .." (இப்பொழுது கண்ணில் விழும் போல ஒரு விழுந்தால் அதை பச்சை என்று உணர் )
ஆனால் அந்த பச்சைகுரிய தன்மை எனது மனதினாலேயே தீர்மானிக்கப் படும் ... அந்த தன்மை ஆளாளுக்கு வேறுபாடும் .. அதாவது பச்சை என்று நினைக்கும் போது உடனே உங்கள் மனதில் தோன்றும் நிறம் இன்னொருவர் சிவப்பு என்று நினைக்கும் போது அவர் மனதில் தோன்றும் நிறத்துக்கு சமமாக இருக்கலாம் ...
கணணி அறிவுள்ளவர்களுக்கு இதை
இவ்வாறு விளக்கலாம் ....
ஆக இருவர் ஒரு பொருளை பாக்கிறார்கள்... இருவரும் அதன் நிறத்தை சரியாகச் சொல்கிறார்கள் .... ஆனால் உண்மையில் அவர்கள் இருவருக்குள்ளும் நடந்த processing வேறு வேறு .... இதை உணர்ந்து கொள்வது கடினம் ... சிறிது ஆழ்ந்து சிந்தித்தல் விளங்கும் .... இவ்வாறே "ருசி" களும் ... எல்லோரும் "தேன்" குடிக்கிறோம் .. உடனே "இனிக்குது" என்கிறோம் ... எமக்கு தேன் தரும் ருசிக்குப் பெயர் இனிப்பு என்பது சின்ன வயதிலிருந்து சொல்லித்தரப் பட்டுள்ளது .... இந்த தேன் தரும் ருசியை நான் உணரும் உணர்ச்சி ஆனது கத்தரிக்காய் தரும் ருசியை நீங்கள் உணரும் உணர்ச்சிக்கு சமமாக இருக்கலாம் ...

உண்மைகள் பற்றிய இப்படியான விடயங்கள் தொடரும் ....
ஆம்!! கேள்விக் குறிக்கு அடியில் ஏன் புள்ளடி வந்திருக்கும் ..?? கையொப்பங்களை ஏன் அநேகமானோர் புள்ளடி உடன் தான் முடிக்கின்றனர் ??.... அநேகமானோர் சிறு கோடு ஒன்று வெறுங்கையால் கீறும் போது முடிவில் ஏன் டக் எண்டு ஒரு குத்து போடுகிறார்கள் .... ??? ஆம் இவை அனைத்தும் தன்னை அறியாமல் போடப்படும் குத்துக்கள் .... அவ்வாறே எங்களை அறியாமல் எங்களுக்கு தெரியாமல் "உண்மை" ஒன்று உண்டு ... அது புள்ளி போலத்தான் இருக்க வேண்டும் ... இருந்துகொண்டிருக்கிறது ....


மீள்பதிவு ;-)