அண்மையில் இடம்பெற்ற பதிவர் சந்திப்பிற்குச் சென்று வந்ததிலிருந்து பதிவிடுவோமென்று சிந்தித்தாலே பலவாறு சிந்திக்க வேண்டியிருக்கிறது.எங்கள் அண்ணன்மார் தெரிவித்த கலந்துரையாடிய கருத்துக்களை அனுசரித்துத் தான் இனிமேல் பதிவெழுதுவதாக அன்று முடிவெடுத்திருந்தேன்.
இப்போது தான் பார்த்தேன் பவன் தான் இரசித்த மொக்கைப் பதிவுகள் - 2010 என்று ஒரு பதிவிட்டிருந்தார்.அதிலே தேடிப்பார்த்தேன் என் பதிவு எதனையும் காணவில்லை.நான் எழுதும் எல்லாப் பதிவையும் மொக்கைப் பதிவாய்க் கருத்தித்தானே பதிவேற்றுகின்றேன்.ஒன்றுகூடவா பவனுக்குச் சிக்கவில்லை.கடுப்பாகி பவனுக்கு வெள்ளை வான் அனுப்புவோமாவென்று சிந்திக்கையில்தான் பவனுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வழங்கி அவரது 2011 பதிவுகளிலாவது இடம்பெறுவோமென்று முடிவெடுத்தேன். சின்மஜா.. உன் மொக்கை இராச்சியம் தான் இனியென்று ஒரு மொக்கைப் பதிவு எழுதுவோமென்று பார்த்தால்